Thursday, July 14, 2022

ரிஷி சுணக்

 

#ரிஷிசுணக்

நம் நாட்டு தொடர்புள்ள சரித்திர நிகழ்வுகள் நடக்கும் போது வழக்கப்படி நம்ம உள்ளூர் ஊடகங்கள் அதை கவனிக்க தவறி ஒரே சமயத்தில் 3 பேருடன் கள்ள தொடர்பு கொண்ட பேராசிரியை என்றோ.. அல்லது ஈஸிஆரில் எங்கு நல்ல பிரியாணி கிடைக்கும் என்றோ செய்தி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை என்று சென்ற 1940 கள் வரை "பப்" களிலும் "கிளப்" களிலும் எழுதி வைத்திருந்த அதே இங்கிலாந்தில் இன்று ஒரு இந்திய வம்சாவழி நபர் அந்த நாட்டின் தலைமை பதவிக்கு போட்டியிடுகிறார்.  இவரே தான் கடந்த ஒன்றரை வருடமாக இந்த நாட்டின் நிதி மந்திரியாக பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். அந்த நிதி மந்திரி நிலையை எட்டுவதை ஒரு 30 வருடம் முன்பு நினைத்தே பார்க்க இயலாது. அப்படி இருக்க இன்று அதையும் தாண்டி மேலே ஏற போட்டி போடுகிறார்.

எந்த இந்தியர்கள் பாராளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு தகுதியில்லாத காட்டுமிராண்டிகள் என்று திருவாளர். சர்ச்சில் பிரபு சொன்னாரோ அதே இங்கிலாந்தில் அதே சர்ச்சில் அமர்ந்து ஆண்ட பதவிக்கு ஒரு இந்திய வம்சா வழியினன் வெறும் 80 ஆண்டுகளில் போட்டியிடுகிறார்.

எப்பேற்பட்ட மாற்றம் இது!
எப்பேற்பட்ட வளர்ச்சியிது!!

இந்த நிலையை அடைய அந்த ரிஷிசுணக் மற்றும் அவரது குடும்பத்தினர் எப்படி திட்டமிட்டனர் உழைத்தனர் என்பதெல்லாம் பின்னாளில் அவர்களே புத்தகமாக எழுதலாம்.  அதைவிடுவோம்.

ஒரு பாமரனாக அதே நாட்டில் வேலை செய்தவனாக இதை நான் எப்படி பார்க்கிறேன்.? நிறவெறியின் மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கும் இந்த நாட்டில் குடியேறிய ஒரு இரண்டாம் தலைமுறை இந்திய வம்சா வழி இளைஞ்ரால் செய்யப்பட்ட ஒரு அசாத்தியமான சாதனை இது.

இத்தனைக்கும் இவர் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில்  ஒருவரான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை. 

திருமணத்திற்கு முன்பே இவர் தன் சொந்த முயர்ச்சியில் பல கோடிகளை சேர்த்தவர். இவரின் தந்தை மற்றும் தாய் மருத்துவ தொழிலில் ஏற்கனவே நிறைய பணம் ஈட்டியவர்கள்.

பலருக்கும் தெரியாத விஷயம்.  இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருக்கும் எம். பி. களில் மிகப் பெரிய பணக்காரர் இந்த ரிஷிசுணக் தான்.

ஆக நாம் சாதாரணமாக வெற்றியாளர் என்று பண அளவில் மதிப்பீடு செய்யும் விஷயங்களை இவர் எப்போதோ தாண்டி விட்டார்.

இந்த நிலையை அடைய இவர் தன்னிலையில் எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. 

வெறும் கான்வென்ட் பள்ளியில் படித்தற்கே .. ஓ.. என் மகனா.. அவன் பெயர் Paddy.  பத்மநாபன் என்கிற பெயர் மிகவும் கர்நாடக இருக்கு..அவனோட தாத்தா பாட்டி ஆசைக்கு வைச்சோம்.  வாயில் நுழையமாறி Paddy ன்னு கூப்பிடுகிறோம்.. என்று சொல்லும் காலத்தில் இருந்து இன்னும் கீழே சென்று அர்த்தமேயில்லா விட்டாலும் மிஷ்கின் புஷ்கின் என்று அலையும் காலம் இது.   

அரசியலில் முன்னேற அவர் தன் மதத்தை நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்க வில்லை. இன்றும் இவர் தன்னை இந்து என்றுதான் சொல்லிக் கொள்கிறார்.

எந்த விதத்திலும் சலுகைகளின் அடிப்படையில் முன்னேற முனையவில்லை. தான் சிறுபான்மையினர் என்று அழுது அடம்பிடித்து பச்சாதாபம் தேட வில்லை.

அதே சமயம் நான் யார் தெரியுமா?  நீங்கள் ஏறி மிதித்த நாட்டை சேர்ந்தவன். எப்படி வந்திருக்கேன் பார்த்தீர்களா ?  என்றும் அறைகூவுல் விடும் விதத்திலும் நடக்கவில்லை.

நான் பத்திசாலி. படித்தவன். திறமைசாலி. இதுவரை என் சாதனை இது.

என்று முன்வைத்து கம்பீரமாக வழி விட சொல்கிறார்.

இன்றைய இளைஞர்களுக்கு இது தான் தேவை.

வெற்றியோ தோல்வியோ.. உன் திறமையை அறிவை முன்நிறுத்து. பாடுபடு. மரியாதை தானாக தேடி வரும். பிச்சை பாத்திரம் ஏந்தி பரிதாபம் தேடுவதை விடுத்து உன் திறமையை உன் சக்தியை விளம்பர படுத்தி வளம் சேருங்கள். சேர்த்த வளத்தை நல்ல படி செலவு செய்து அடுத்த நிலைக்கு முன்னேற முதலீடு செய்யுங்கள்.

 

இதைதான் திரு. மோடி மற்றும் பாஜக மத்தியில் செயல்படுத்துகிறது.

இந்தியாவின் ஏழ்மையை வியாபாரம் செய்யாமல் மனித வளத்தை அறிவு வளத்தை நெஞ்சு நிமிர்த்தி சொல்லி உலகை கவர்கிறார்.

அதனால்தான் அவரது அரசின் மீது உலக பார்வை படுகிறது. மதிப்பு உயர்கிறது. 

ஒரு வெற்றி எப்படி இருக்க வேண்டும்.? 

யார் நம்மை அடிமை படுத்தி கொள்ளையடித்து சூறையாடி நசுக்கினார்களோ அவர்களே நம் சக்தி உணர்ந்து, வரவேற்று மாலை சூடி மகிழ்ச்சியுடன் தலைவராக ஏற்றுக் கொள்ளுவதே நிரந்த வெற்றி.

இப்படி பட்ட வெற்றியை கல்வி, ஒழுக்கம் மற்றும் அறிவு கொண்டே பல தலைமுறைகள உழைத்தே அடைய முடியும்.

இந்த வெற்றியை போரினால் அல்லது குண்டு வைத்து ரத்த களரியாக்கி அடைய முடியாது. அப்படி அடையும் வெற்றி நிரந்தரமானதும் அல்ல.

சுடுகாட்டில் ராஜாவாக இருந்து என்ன பயன்.??

இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் ஒன்று ரிஷி சுணக் போன்றவர்கள் மேலேறி வந்தால் இந்தியர்களாக நாம் குளிர் காயலாம் என்று நினைக்காதீர்கள்.

அது நடக்காது.

ரிஷி போன்றவர்கள் தாம் சேர்ந்த இடத்திலும் செய்யும் செயல்களிலும் பாரபட்சமின்றியே இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் எங்கு சென்றாலும் உயர்கிறார்கள்.

அவர்களை பார்த்து நீங்கள் பெருமையடையுங்கள்.

அவர்களின் வழி என்ன என்று கண்டு அதன் படி உழையுங்கள்.

அவர்களிடம் சலுகைகள் கேட்காதீர்கள்.

ரிஷி.சுணக் இங்கிலாந்தின் பிரதமராக நாளை ஆகலாம்.

அது ஒரு இந்தியரின் வெற்றி அல்ல.

ஒரு இந்திய பாரம்பரியத்தில் வாழும் பிரிட்டானியரின் வெற்றி !!

வாழ்த்த தயாராக இருங்கள்.

ரவி சுந்தரம்

14/07/2022.

Thursday, February 07, 2019

#justiceforramalingam #arrehman #vaali #வாலி #ஏஆர்ரெஹ்மான்
எச்சரிக்கை:- தனிப்பட்டவர்களை குறை சொல்லும் அல்ல !!
திருபுவனம் ராமலிங்கம் அந்த வீடியோவில் மதம்
மாற்ற வந்த இஸ்லாமியரை கேட்கிறார்.
"என் தெருவில் உனக்கு நான் இன்று ஒரு வீடு வாங்கி தருகிறேன். உன் தெருவில் உன்னால் எனக்கு ஒரு வீடு வாங்கி தர இயலுமா "...நியாயமான கேள்வி.
இதற்கு அந்த இஸ்லாமியர் பதில் சொல்லாமல் நழுவி "வாங்க அய்யரு வீட்டில் போய் பொண்ணு கேட்போம்" என்கிறார்.
இங்கு நீங்க பார்க்க வேண்டியது யார் யாரை ஒதுக்குகிறார்கள் என்பதாகும்.
இது சம்பந்தமாக
இரண்டு சம்பவங்கள் இருவரும் திரைத்துறை கவிஞர்கள். ஒரே இசையமைப்பாளர்.
முதல் சம்பவம்:-
ரெஹ்மானின் அழைப்பின் பேரிலேயே கவிஞர் பிறைசூடன் தன் இயல்பாக நெற்றியில் வீபூதி குங்குமம் பூசி வந்தபோது ரெஹ்மானினின் எதிரில் அவரது தாயார் "இப்படியெல்லாம் இங்க வராதீங்க" என்று அவமதித்து அனுப்புகிறார்.

இரண்டாவது சம்பவம்:-
முருகனின் மீது மாறாத பக்தி கொண்ட பிறப்பால் அய்யங்க்காரான வாலி ஒரு நாள் இரவு 10 மணிக்கு பாட்டு கேட்டு தன் வீடு வந்த ஏ.ஆர். ரெஹ்மானுக்கு ரம்சான் நோம்பு முறிக்க இடம் தந்து (பிராத்தனை செய்ய இடம்) உணவும் தந்து விருந்தோம்பல் செய்கிறார்.

எந்த மதம் எதை விதைக்கிறது?😕
யார் யாரை மதிக்கிறார்கள் என்று புரிந்து கொள்க !
இந்த இரு சம்பவங்களில் ஒராரயிரம் அர்த்தங்களும் ,மூடி மறைக்கபடும், திரிக்கப் படும் பல ஆயிரம் காலத்து பெருந்தன்மைகளும் அடங்கியுள்ளது.
புரிந்தவன் புத்திசாலி.

ரவி சுந்தரம்🙏🙏
7/02/2019
பி.கு:- வாட்ஸ் அப்பில் பகிரும் நண்பர்களே !! தயவு செய்து என் பேரையும் போட்டு பகிருங்கள்.

Saturday, February 02, 2019

20 நூற்றாண்டின் இரண்டாம் உலக அரசியல் திருப்பு முனை

#iran #khomeini
சில நிகழ்வுகள் சரித்திரமாகின்றன. அந்த சரித்திர நிகழ்வுகள் ஒரு நாட்டை அல்லது சில சமயங்களில் உலகையே திருப்பி போட்டு விடுகின்றன. அப்படி ஒரு நிகழ்வு நடந்து இன்றுடன் 40 வருடமாகின்றது. 😮
சுதந்திரம், மனிதாபிமானம் என்கிற பார்வையில் மேற்குலகம் தன் கண்ணை தானே குத்திக் கொண்ட நாள். பிப் 1, 1979.
மேற்கு நாடுகளின் நண்பரும் ஈரானிய மன்னருமான ஷா பஹலவி க்கு எதிராக கிளம்பிய ஷியா பிரிவு இஸ்லாமியத்தின் தீவிரவாத குழு தலைவரான அயத்துல்லா ரோஹொல்லா கொமினி (சுருக்கமாக கொமினி) தனக்கு அடைக்கலம் கொடுத்த பிரான்சு நாட்டிலிருந்து நாடு திரும்பிய நாள் இன்று !!

டெஹ்ரானில் இறங்கி ஷாவை தான் வந்த அதே மேற்குலகுக்கு விரட்டி அடித்தார். பின் மிகவும் நன்றியுடன் அதே மேற்குலகை தன் நாட்டின் அனைத்து கெடுதிகளுக்கும் காரணம் என்று சுட்டிக் காட்டி கட்டம் கட்டி மிரட்டினார். இவர் எதிர்த்த ஷா பஹலவி இவரை கொல்ல முயன்றார் என்று தப்பித்து ஓடி வந்த போது தனக்கு அடைக்கலம் கொடுத்த மனிதாபிமான பிரான்சையும் விட்டு வைக்கவில்லை.

"எண்ணை கடலின் மீது மிதக்கும் கம்பளமாக நம் அரபு நாடுகளை வைத்தது அல்லா நமக்கு கொடுத்த கோடை. இதை கொண்டு உலகையே வெல்வோம்" என்று கர்ஜித்து உலகை பெட்ரோலிய பொருள்களுக்காக மண்டியிட வைத்தார்.
இதற்கு பிறகு உலக பொருளாதாரம் மற்றும் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தில் நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்த ஒரு நிகழ்வே திருப்பு முனையாகியது. அதே சமயம் அரபு நாடுகளின் அபரிமிதமான (LOPSIDED) வளர்ச்சிக்கும் அடி கோலியது.
இதில் பெரும் சோகம் என்னவென்றால் இவர் காட்டிய வழியில் பெட்ரோலிய நாடுகள் காசு பார்த்தன. துபாய் போன்ற நாடுகளின் மக்கள் பெருவாழ்வு வாழ தொடங்கினர். ஆனால் இவரை வரவழைத்து கொண்ட்டாடிய ஈரான் ஒரு 30 ஆண்டுகள் பின்னுக்கு சென்றது. இவருடன் தெருவில் இறங்கி போராடிய சாமான்யர்கள் இன்றும் ஏழைகளாகவும் ஒடுக்கப் பட்டனர். எந்த சர்வாதிகாரியை ஒழித்து மக்களுக்காக என்று வந்தாரோ அவரே அந்த மக்களை மதத்தின் பெயரால் அடிமைபடுத்தினார். இன்று வரை அது தொடர்கிறது.
ஜனநயாகத்தின் நிழலில் வளர்ந்த கொடுங்கோலர் இவர். மத தீவிரவாதத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நியாயம் என் நம்புபவர். கருத்து சுதந்திரம் என்பது கத்திரிக்காய் என்று சல்மான் ருஷ்டி போன்றவர்களின் தலைக்கு விலை வைத்த மகான். அந்நிய மத மக்களை மனிதர்களாகவே இவர் மதிப்பதில்லை.
தனக்கு நிழல் கொடுத்த மரத்தையே வெட்டும் நன்றியுள்ள தலைவர் இவர்.
இஸ்லாத்துக்காக எதுவும் தவறில்லை என்பவர்.
இவரை விமர்சிப்பதால் இஸ்லாத்தின் ஒரு பிரிவான ஷியா பிரிவினரை விமர்சிப்பதா என்றால், அவர் தான் இஸ்லாத்தின் ஒரு பிரிவினருக்கான அடையாளம் என்றே தன்னை முன்னிறுத்தி கொண்டார். எனவே விமர்சனம் தவிர்க்க முடியாதது.
இவரை எதிர்க்கத்தான் மேற்குலகு சதாமை வளர்த்தது. மத்திய கிழக்கில் அமைதி பறிபோய் பல போர்களின் காரணமாக பல லட்சகணக்கான மக்கள் இறந்தனர். இன்னமும் இறக்கின்றனர்.

எப்படி ஜெர்மனி என்கிற ஒரு நாட்டின் ஹிட்லெர் என்கிற ஒற்றை தலைமை வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவின் சரித்திரமே மாறி உலகை பாதித்ததோ அதே போன்ற இவர் உலக சரித்திரத்தை பாதித்தார்.

40 வருடங்கள் முன்பு பிரான்ஸ் வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் உலக சரித்திரம் நிச்சயமாக வேறு மாதிரி இருந்திருக்கும். ஐரோப்பா மீண்டும் ஒரு முறை தவறு செய்தது.

நன்றி
ரவி சுந்தரம்.
01/02/2019

பி.கு :- இதிலிருந்து இந்தியா பாடம் படிக்க வேண்டுமா என்றால் நிச்சயம் பாடம் படிக்க வேண்டும்