Tuesday, October 09, 2012


பல பொருள் வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவையா?




இது சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்ளும் வேலை. 

நான் பிரித்தானியாவில் சுமார் 12 ஆண்டுகளாக வாழும் ஒரு தமிழன். 
நான் இவர்கள் கூறும்  TESCO வில் சுமார் 5 ஆண்டுகள் அதிகாரியாக வேலை செய்தவன். தொடர்ந்து இங்கிலாந்தின் கிராமங்களில் வாழ்பவன். நான் லண்டனில் வசிப்பவன் அல்ல
எனவே இந்த பெரிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் இங்கிருக்கும் கிராம பொருளாதாரத்தை எப்படி சிதைத்து தம் கைகளில் வைத்துக்கொண்டுள்ளன என்று எமக்கு நன்றாகவே தெரியும். 
இத்தனைக்கும் இங்கு கிராமப்புறங்களில் ஓரளவுக்கு வளமான குடும்பத்தினரே வாழ முடியும். காரணம் இங்கிருக்கும் சூஷ்நிலை அப்படி..  இந்நிலையில் நம் கிராமங்களை போன்று ஏழ்மை சூஷ்ந்த பகுதிகள் என்ன ஆகும்.?

அந்நிய முதலீட்டை பல் பொருள் அங்காடியில் நுழையவிட்டால் என்ன ஆகும்? 
முதலில் கிடைக்க போவதாக  கூறப்படும் நன்மையை பார்ப்போம்:

1. தரம் உயரும்? - தரமான பொருள்களை வாங்க மக்கள் தயாராக இருப்பின் நாமே அதை தரலாமே!
 2. இடை தரகர் ஒழிக்கப்படுவார்.  உண்மை. ஆனால அவரது லாபமும் அங்காடி முதலாளிகளுக்கே செல்லும். உற்பத்தியாளருக்கு அல்ல. 
3. பகேஜிங் மற்றும் இது தொடர்பான தொழில்களில் மிகப்பெரிய முன்னேற்றம் பெருகும். உண்மை. ஆனால் அதன் விலை யார் தலையில் விழும்? மேலும் அந்த முயற்சியை இன்று நம்மவரே செய்ய தொடங்கிவிட்டனரே? இவர்கள் எதற்கு.?  ஒரு உதாரணம் "சிக்" மற்றும் "வெல்வெட்" ஷாம்பூ பொருள்கள். இன்னொரு உதாரணம்.  "ஹட்சின்சன்" பால் பொருள்கள்.
 4.வேலை வாய்ப்பு பெருகும்.  இது முட்டாள் தனமான வாதம். காரணம் இன்று எந்த பலசருக்கு கடையிலும் தவறாமல் காணப்படும் ஒரு பலகை. "வேலைக்கு ஆட்கள் தேவை" என்பதுதான். ஆப்படி இருக்கு இவர்கள் யாருக்கு வேலை கொடுக்க போகிறார்கள்.?  

பாதகங்கள் யாவை: ?
1. கொள்முதலில் முதலில் ஓரளவு லாபம் பார்த்த உற்பத்தியாளர்கள் சிறிது காலத்திற்கு பின் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் செல்லும் விலைக்குத்தான் கொடுக்க வேண்டும். காரணம் சந்தையில் போட்டி மிக குறைவாக இருக்கும். இதற்கான காரணம் சிறு கடைகள் இந்த திமிங்கிலங்களுடன் போட்டி போடா இயலாமல் நஷ்டப்பட்டு மூடப்படும். 
2.  மிக பெரிய கொள்முதல் என்பதால் சிறு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒதுக்கபடுவார்கள் அல்லது அவர்களின் நிறுவனமும் பெரிய விவசாயிகளால் அல்லது உற்பத்தியாளர்களால் விழுங்கப்படுவார்கள். மேலை நாடுகளில் இன்று சிறு விவசாயிகளே இல்லை என்று கூறலாம். 
3  சிறுவிவசாயிகள் இன்று சொந்தமாக தொழில் செய்கிறார்கள். ஆனால் இவர்களின் தொழில் மேலே சொன்னது போன்று பாதிக்கப்படும் பொது ஒன்று இவர்கள் பெரும் பண்ணையார்களிடம் விவசாய கூலிகளாக செல்வார்கள். அல்லது நகரத்தை நோக்கி நகர்வார்கள். இது இவர்களுக்கும் நல்லதில்லை. நகரத்திற்கும் நல்லதில்லை. 
4. கிராமங்கள் அழியும்போது அதன் கூட நம் கலாச்சாரமும் அழியும். நம் வாரச் சந்தை வழக்கம் அழியும்.நம் நாட்டுப்புற கலைகள் அழியும். நமது தொன்று தொட்டு வரும் கைத்தொழில்கள் மறையும். நம் குடும்ப உறவுகள் பாழ்படும்..  

இப்போதே நகரங்களின் குடும்பங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாவற்றிக்கும் இந்த பெரு நகர வர்த்தக நிறுவனங்களையே நாம் சார்ந்திருபோம். அவர்கள் தம் லாபத்திற்காக சீனா போன்ற மலிவான பொருள்கள் கிடைக்கும் இடத்தை நம்பி இருப்பார்கள். 

உள்ளூர் திறமைகள் அழிந்து போகும். 

மேலே சொன்னவை பயமுறுத்துவது போல் இருக்கலாம். ஆனால் அவைதான் இன்று இங்கு இங்கிலாந்து கிராமப்புற மக்கள் இழந்துவிட்டதாக வருந்துகின்றனர். 
உதாரணமாக பால் உற்பத்தியை எடுத்துக்கொள்வோம்.
முன்பு அந்தாந்த கிராமங்களில் பால் உற்பத்தி செய்யப்பட்டு அவர்களின் பயன்பாட்டுக்கு உடன் கொண்டு வரப்பட்டதால் அங்கு சிறு பால்பண்ணைகள் நடைபெற்றுவந்தன. 
இவர்கள் தரத்தில் எந்த குறையும் இல்லை. பெகேகிங் முறையிலும் நவீனமே. பின் எப்படி இவை அழிந்தன.?  முதலில் இவர்களின் மொத்த உற்பத்தியும் இந்த பெரு நிறுவனங்கள் நல்ல விலைக்கு எடுத்துக்கொள்வதாக ஒபந்தம் இட்டு கொண்டன. பால் பண்ணை உரிமையாளருக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் இவர் இனி வீடு வீடாக சென்று பால் போடும் வேலை மற்றும் செலவு மிச்சம் அல்லவா.? லாபம் லாபம் ..லாபம் மட்டுமே.  

அதே நேரத்தில் இந்த கிராமத்தின் வெளியே ஒரு பெரிய இடத்தில் இந்த வர்த்தக நிறுவனம் தம் கிளையை துவங்குகிறது. எல்லோருக்கும் மகிழ்ச்சி..ஆஹா ..மலிவான விலையில் எல்லா பொருள்களும். வேறென்ன வேண்டும்.? கூடம் அலை மோதுகிறது. சுற்றியிருக்கும் சுமார் ௩௦ கிராமங்களின் மக்களும் இங்கேதான்!. 
திருவிழாதான்.!!

ஒரு வருடத்தில் சுற்றியிருக்கும் 30  க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த சிறு சிறு கடைகள் வாடிக்கையாளர் இன்றி மூடப்படுகின்றன. இறைச்சி கடைகள் மூடப்பட்டு அதில் வேலை செய்யும் திறமையான 
முதலாளி இந்த பெரிய வர்த்தகத்தில் இறைச்சி பகுதியில் வேலை செய்ய வருகிறார். வேறு வழி. ? 
வாரச் சந்தைகள் புதிய விளை  பொருள்களை விற்றது நின்று போய் பழய புத்தகங்கள் சிடிக்களையும் டிவிடிக்களையும் விற்க தொடங்கினர். 

சிறு பண்ணைகள் ஒருங்கிணைப்பு என்கிற மந்திரத்தில் பலர் வேலை இழக்கின்றனர். சிறு கடைகள் மூடப்பட்டு அதன் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் வேறு இடம் பெயர்கின்றனர். எனவே கிராம மக்கள் தொகை பாதிக்கப்படுகிறது. கட்டுபடியாகவில்லை என்று உள்ளுருக்கு வரும் பேருந்து நிறுத்தப்படுகிறது. வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டு online - வங்கிகள் மட்டுமே இருக்கின்றன. கிராம ஜனத்தொகை மேலும் சுருங்குகிறது. கட்டுபடியாகவில்லை என கூறி தபால் ஆபிஸ் கூட மூடபடுகிறது. 

சிறு கடைகள் மூடப்பட்டதினால் பெரிய நிறுவனத்தில் மேலும் லாபம்.  மேலும் புதிய பகுதிகள்..மேலும் திருவிழா. !!
மக்களுக்கு சேவை செய்ய தாமே தபாலாபிஸ் திறப்பதாக பெரிய நிறுவனம் அறிவிப்பு.  !!!
(இது எப்படி இருக்கு!!...கழுத்தை அறுத்துவிட்டு நெத்தியில் போட்டு வைப்பார்களாம்!!)

ஆனால் இப்போது இந்த நிறுவனம் தமக்கு பொருள்கள் தரும் விவசாயிகளிடம் சில நிபந்தனையோடு வியாபாரம் செய்கின்றன. விலையை தாமே தீர்மானிக்கின்றன. விவசாயிகள் அல்லது பால் உற்பத்தியாளர் எவ்வளவு லாபம் அடையலாம் என்பதை தாமே தீர்மானிகின்றன. இடு பொருள் என்ன என்று தீர்மானிகின்றன. பகேகிங் எப்படி இருக்க வேண்டும் என்று கட்டயப்படுதுகின்றன. இல்லை என்றால் தமது பொருளாதார வலிமையினால் பொருள்களை மற்ற நாடுகள் (நுஜிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ) முலம் பெறுகின்றன. (இப்படி உலகளாவிய கொள்முதலினால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பு இன்னொரு கொடுமை!)

 இப்போது இதை விவசாயிகள் எதிர்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வேறு வழில்லை. காரணம் மற்ற சிறு கடைகள் மற்றும் சந்தைகள் ஒழிந்துவிட்டனவே. ஆக, இவர்கள் ஒன்று தம் தொழிலை விடலாம். அல்லது இந்த நிறுவனம் சொல்லும் விலைக்கு விற்று வயிறு வளர்க்கலாம். 
இங்கிலாந்தில் சில வருடங்களுக்கு முன்பு பல இடங்களில் இந்த பெரிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பால் கொள்முதல் விலையை குறைத்து கொள்ளை அடிப்பதாகவும், அரசு தலையிட வேண்டும் என்றும் போராட்டமே  நடந்தது. நம் நாட்டில் அரசே கொள்ளை அடிப்பது வேறு விஷயம்.!!

சுற்றியிருக்கும்  கிராமங்களில் இருப்பவர்கள் பெருமளவு ஒன்று இந்த வர்த்தக நிறுவனத்திற்கு வேலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திருக்கு வேலை செய்ய வேண்டும் என்கிற நிலைமை தோன்றிவிட்டது. 
இது ஒரு மோசமான கழுத்தை இறுக்கி பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டதை இன்று இந்த கிராமமக்கள் உணர தொடங்கி விட்டனர்.  ஆனால் இதிலிருந்து மீண்டு வர பெரிய சுய சார்பு இயக்கமே இவர்கள் நடத்த வேண்டியுள்ளது. நடத்தவும் தொடங்கிவிட்டனர். !!  அனால் என்ன கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.


இது ஒரு சின்ன உதாரணம்தான். இது போல் ஒவ்வொரு உற்பத்தியும் தொழிலும்  கார்போரேட் லாபத்திற்காக நசுக்கப்படும். 
மேற்றுமொரு உதாரணம் மன்செச்டேரில் நசிந்து போன காட்டன் மில்கள். இந்த விஷயத்தில் நாம் முன்பு பெருமளவு செய்த காட்டன் ஏற்றுமதியும் ஒரு காரணம்.!! இன்று மான்செஸ்டர் மற்றும் அதன் சுற்று புரத்தில்தான் அதிக பட்ச வேலைல்லதோர் இருக்கின்றனர். காட்டன் மில்களே கிடையாது. ரெடிமேட் துணிகள் அதிகம் உற்பத்தி செய்த லெஸ்டர் (LEICESTER) போன்ற நகரங்கள் அந்த தொழிலை பெருமளவு இழந்தன. (நன்றி இந்தியா மற்றும் சீனா!!)
இன்று அதே நிலைமை சீனாவின் ஏற்றுமதியால் நம் கோயம்பத்தூர் மற்றும் திருப்பூருக்கு ஏற்பட்டுள்ளது. 

இப்படியிருக்க சுய சார்புள்ள நாம் ஏன் அதை இழந்து அந்த சூழ்நிலைக்கு செல்ல வேண்டும்?
இவர்களை தள்ளியிருந்து பார்த்து நாம் கற்றுக்கொள்ள கூடாதா?
 இந்த கார்பொரேட் கம்பெனிகளுக்கு மென் பொருள் எழுதி 
அவர்களை இயக்குவதே நம்மவர்தானே. அப்படி இருக்க எப்படி இந்த தொழில் நமக்கு தெரியாமல் இருக்கும் அல்லது 
அவர்கள் நமக்கு என்ன புதிதாக கற்றுகொடுதுவிடப் போகிறார்கள்?

மூலதனத்துடன் வருபவன் சமுக சேவை செய்ய வரவில்லையே?
வெளியிலிருந்து மூலதனம் போட்டு வருபவன் நாம் கலாச்சாரத்தை பேணுவானா அல்லது தமது லாபத்தை பார்பானா.? 

கார்பொரேட் கலாச்சாரத்தால் இங்கிலாந்து இழந்த, நாம் நம் நாட்டில் இழந்துவரும் கைத்தொழில்கள். 
 மர வேலை. அல்லது தச்சு.
 மண்பாண்டம் செய்தல்
 நகை வேலை செய்யும் அசாரி
 சிறு விவசாயிகள்
பால் தயிர் வெண்ணை வியாபாரி 
தோல் பொருள்கள் செய்யும் தொழில்
சிறு தையல் கடைக்காரர்.
சிறு மளிகை கடைக்காரர். 
சிறு அரிசி மண்டி  
உள்ளூர் சிறு தொழில்கள் 

இப்படி இன்னும் பலர். 
இது தேவையா!!

நான் வாழ்ந்துவரும் ஒரு இங்கிலாந்து கிராமத்தின் கதையைத்தான் மேலே கூறினேன். 
இது பல அடிப்படை வசதிகள் முழுவதும் அமைந்த ஒரு கிராமத்தின் கதை என்றால் இது எதுவுமே இல்லாத நம் கிராமங்கள் என்ன ஆகும். சூறையாடப்படும். 

Friday, January 06, 2012

சுய விமர்சனம் தேவை!!


மருத்துவர் சிவகாமி கொலை செய்யப்பட்டது வருத்தத்திற்குரியது. கண்டிக்க தக்கது.
ஆனால் இதன் தொடக்கம் எங்கேயுள்ளது என்பதை இந்த மருத்துவர் உலகம் கொஞ்சம் சுய விமர்சனத்தோடு சிந்திப்பது நல்லது. மேலும் இது போன்று இன்னொரு கொடுஞ்செயல் நடவாமல் தடுக்க அதுவே சரியான வழி.

எல்லோருக்கும் இருக்க வேண்டிய சமுக நலன் குறித்த சிந்தனை இவர்களுக்கு இவர்களுக்கு மட்டும் இல்லாமல் போனது எப்படி.? ஒரு தனி மனிதன் செய்த தவறுக்கு ஒரு சமூகத்தையே இவர்கள் எப்படி "வேலை நிறுத்தம் " என்ற பெயரில் மிரட்ட முடியும்.?
உலகிலேயே இப்படி ஒரு அயோக்கியத்தனமான மருத்துவ கும்பலை பார்க்க முடியாது.
ஒரு 5 நயாபைசா அளவுக்குகூட மனிதாபிமானமே இல்லாத கூட்டமாக இந்த மருத்துவர் உலகம் மாறிப்போனது மிகவும் கண்டிக்க தக்கது.
இவர்களைப பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
ஒரு போக்கு வரத்து ஊழியர் தாக்கப் பட்டால் உடனே அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்வதைப் போல இவர்களும் செய்யலாமா?
ஒரு நாள் பேருந்து இல்லையென்றால் நடந்து போய் நமது காரியங்களை கவனிக்கலாம். ஆனால் விபத்தில் உயிருக்கு போராடினால் ஒரு நாள் கடந்து மருத்துவம் பார்க்கலாமா ?
இதானால்தான் ஒரு மருத்துவரை உருவாக்க நமது வரிப் பணத்திலிருந்து சுமார் 10 முதல் 40 லட்சம்வரை செலவழிக்கப் படுகிறது. அப்படியிருக்க இவர்கள் இப்படி மக்களை பிளக்மெயில் செய்யலாமா? ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழிலோழுக்கம் உள்ளது. தொழிலோற்றுமையை பேணும் இவர்கள் தொழிலோழுக்கத்தை ஏன் மறந்து போகின்றனர்?
இவர்களின் கோரிக்கையை பாருங்கள். அதிலும் பணம் பணம் பணம் மட்டுமே !!!
இறந்து போன மருத்துவர் சிவகாமி குடுபத்திற்கு 10 லட்சம் அரசு தர வேண்டுமாம்!!
எதற்கு ??

அரசு மருத்துவரான அவர் உத்யோகத்தில் சம்பாதித்தது பற்றாமல் தன் வீட்டிலேயே
மருத்துவமனை கட்டி வசதியாக சம்பாதிதாரே அதற்காகவா?
இவரது குடும்பத்திற்கு என்ன பணக்கஷ்டம்? இவரது இரண்டு பிள்ளைகளையும்
மருத்துவர்கள்ளாக்கி வசதியாக வாழ வைத்துவிட்டார்.
இவர் தன் மருத்துவமனையில் இலவசமாகவா மருத்துவம் பார்த்தார்?
இவருக்கு நேர்ந்த கொடிய முடிவு மற்ற மருத்துவர்களுக்கு ஒரு பாடமாகவல்லவா இருத்திருக்க வேண்டும்?
அதை விடுத்து இதிலும் பணம் பண்ண பார்ப்பது அருவருப்பாக இல்லையா?

தினமணி சரியாக சில கேள்விகளை வைத்துள்ளளது!
சிந்தியுங்கள்.
---------------------தினமணியில் வெளியான கட்டுரையின் மறு பதிப்பு-----------

தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சக மருத்துவர் படுகொலையில், அனைவரும் வேதனைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், ஒரு கிளீனிக்கில் நடந்த சம்பவத்தை ஏன் அரசு மருத்துவமனையோடு முடிச்சுப் போட வேண்டும்? டாக்டர் சேதுலட்சுமி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஆனால், அரசு மருத்துவரின் சிகிச்சையில் குறை கூறியோ அல்லது அரசு மருத்துவமனை வளாகத்திலோ இந்தக் கொலை நடந்திருக்கவில்லை. அவர் தனியாக நடத்தி வரும் சுபம் கிளீனிக்கில் நடந்த சம்பவம் இது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடத்திய அறுவைச் சிகிச்சை; அதன்பின் நேர்ந்த சிக்கல்; அந்தப் பெண்ணின் மரணம்; "பணம் கொண்டு வந்து தரும்வரை மனைவியை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை' என்று கொலைக்குற்றவாளி சொல்லும் குற்றச்சாட்டு என அனைத்து விவகாரங்களும் சுபம் கிளீனிக்குடன் தொடர்புடையவை. மேலும், மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்வதாக கொலையாளி மிரட்டிச் சென்றுள்ளார். அது குறித்து காவல்நிலையத்தில் டாக்டரே புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறை கைது செய்திருக்கலாம் அல்லது சமரசம் பேசியிருக்கலாம். மருத்துவ உலகம் முதலில் கண்டிக்க வேண்டியது காவல்துறையைத்தான்.

இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இறந்துபோன சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வது முறையானதுதானா?
நோயாளிகள் வெளியூர்களிலிருந்து வந்து சிகிச்சை பெற வழியில்லாமல் முதியோரும் சிறுவர்களும் பெண்களும் ஆங்காங்கே, காய்ச்சலாலும் வேறு நோயாலும் முடங்கிக் கிடந்த காட்சி பரிதாபகரமானது. தனியாக சுபம் கிளீனிக் நடத்திய அரசு மருத்துவரின் படுகொலையின் துயரத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் முதுகிலும் ஏற்றிவிடுவது நியாயமல்ல.

சக மருத்துவரின் படுகொலைக்கு வருந்தும் மருத்துவ உலகம், கொல்கத்தாவில் 90 பேர் இறந்த நாளில் கருப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகளின் மரணத்துக்காகத் தங்கள் வேதனையைத் தெரிவிக்கவில்லை. இந்த 90 பேர் மரணமும் வெறும் ரூ.3 லட்சத்தை மிச்சப்படுத்தப்போய் நேர்ந்த சம்பவம். கீழ் தளத்தில், ஸ்டோர் ரூமுக்கு எதிராக இரவில் இறக்கி வைத்த பஞ்சு மற்றும் மருந்து பெட்டிகளில் ஏற்பட்ட தீயை, ரூ.3 லட்சம் மருந்துகள் என்று கணக்குப் பார்க்காமல் தண்ணீரை ஊற்றியிருந்தால், 90 உயிர்கள் இறந்திருக்க நேர்ந்திருக்காது என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்திய பின்னராகிலும், அந்த மருத்துவமனையை மருத்துவ உலகம் கண்டிக்கவில்லை.

இந்த நேரத்தில் இவற்றையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர ஊர்திகள் மட்டுமல்ல, அமரர் ஊர்திகளும் இருக்கின்றன. அன்றாடம் யாரோ ஒருவர் இறக்கின்றார். "டாக்டரும் எவ்வளவோ முயற்சி செய்தார்; முடியவில்லை' என்றுதான் உறவினர்கள் இந்தச் சடலங்களை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். யாரும் கொலைவெறி கொள்வதில்லை.

சில நேர்வுகளில் உறவினர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இறந்தவர்களின் மரணத்தைவிட, மருத்துவமனையில் உறவினர்கள் சந்திக்க நேர்ந்த சம்பவங்கள்தான் என்பதை மருத்துவ உலகம் ஏன் சிந்திக்கவில்லை?

புத்தாண்டு நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனைக்கு, பைக்கில் விழுந்து காயமடைந்து வந்த இளைஞர் தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காகப் பயிற்சி மருத்துவரை அறைந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து போராட்டமும் நடைபெற்றது. அந்த இளைஞர் குடித்திருந்தார் என்பதும், அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்பதும் உண்மைதான். ஆனால், அறைகின்ற அளவுக்கு சுயநினைவுடன் இருக்கும் அவருக்கு முதலுதவி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமா?

"அரை மணி நேரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்று டாக்டர் சொல்வதை உறவினர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நோயாளியைக் கொண்டு வந்து இரண்டு மணி நேரம் ஆனபிறகும் டாக்டரைக் காணாமல், தேடிப்பிடித்து அழைத்துவந்து சிகிச்சை அளித்த பிறகு நோயாளி இறந்தால், தாமதமான சிகிச்சைதான் மரணத்துக்குக் காரணம் என்று உறவினர்கள் ஆத்திரமடைந்தால், அதை மட்டும் ஏன் மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

இத்தகைய தகராறுகள், வன்முறைகள் யாவற்றுக்கும் உயிரிழப்பு காரணம் அல்ல. உயிரிழந்த நோயாளிக்குக் காட்டப்பட்ட அலட்சியம்தான் உறவினர்களின் உணர்வுகளை தீக்கொழுந்தாக்குகிறது.

வேலூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில், காலையில் கையெழுத்துப்போட்டுவிட்டு, பகல் 10 மணிக்கே தினமும் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த 4 டாக்டர்களை காட்பாடி ரயில்நிலையத்தில் பொதுமக்கள் அடித்து உதைத்து, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களுக்கு எதிராக மருத்துவ உலகம் ஏன் போராட்டம் நடத்தவில்லை?

இதே மருத்துவ உலகின் ஒற்றுமைதானே அவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது. மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்ததே, அது என்னவாயிற்று?

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மரணம் தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டாக்டர்கள் குழு விசாரித்ததே, அதன் முடிவு என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான்: "பொய்யான புகார்'. "சாவுக்கு டாக்டரின் சிகிச்சை காரணமல்ல'.

தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமியால் சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்த பெண்மணி பிரசவத்தில் இறக்கவில்லை. ஆறுமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டபோது, தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவரான டாக்டர் சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார். உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்பட்டிருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால், பணம் கட்டிவிட்டுத்தான் அபாயகரமான நிலையில் உள்ள நோயாளியை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறது அந்த மருத்துவமனை என்றால், அதைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லையே... தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்த கணவரை மன்னிக்க முடியாதுதான். அதைத் தீர்மானிக்க காவல்துறையும் நீதிமன்றமும் இருக்கின்றன.

அதற்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை நோயாளிகளை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களது சமுதாயப் பொறுப்பை மறந்துவிட்டு, பணத்துக்காக மட்டுமே இயங்கும் இதயமில்லாத இயந்திரங்களாக மருத்துவர்கள் மாறும்போது அதனால் ஏற்படும் எதிர்வினைகள் தான் இதுபோன்ற சம்பவங்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பைத் தங்கள் இதயத்தில் வைத்துக் கேட்டால், ஒருவேளை அது உண்மை சொல்லும்.

நன்றி : தினமணி