Friday, January 25, 2019

CULT - கருத்து குருடர்கள் உருவாக்கம்


எச்சரிக்கை:- இது கொள்கை விளக்க பதிவு!!
கம்யுனிஸ்ட்கள் அடிக்கடி சொல்வது என்னவென்றால் தனிமனிதர்களை விட கொள்கைகள்தான் முக்கியம் ! இதையே காப்பி அடித்து திமுக வும் சிறப்பாக புலம்பும்.

ஆனால் உண்மை என்ன? இவர்கள் கொள்கைகளை பின் பக்கம் சொருகி கொண்டு நிறத்தையும், தனிமனித உருவத்தையே மீண்டும் மீண்டும் முன்னிறுத்தி மூளை சலவை செய்வார்கள். ஒரு கட்டத்தில் எவனுக்கும் அடிப்படை கொள்கை என்னவென்று தெரியாது. வெறும் உருவத்தை காட்டியே மக்களை ஏமாற்றுவார்கள்.
உதாரணமாக இன்று இருக்கும் கம்மி போராளிகளிடம் சேகுவாரா, மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் படத்தை காட்டுங்கள். உடனே அடையாளம் சொல்வார்கள். ஆனால் யாரிடமாவது இவர்களின் வாழ்க்கை பற்றியோ கொள்கைகள் பற்றியோ கேளுங்கள். ஒரு பயலுக்கும் தெரியாது. அட முழு பெயர் கேளுங்கள் அதுவே தெரியாது. மார்க்ஸ் எந்த ஊர்காரன் எங்கு வாழ்ந்தான் என்று கூட தெரியாது. இது இங்கு மட்டுமல்ல, ரஷ்யாவிலேயே இந்த கதிதான். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் ரஷ்யாவில் இந்த படங்களை காட்டினால் காரி துப்புவான். செருப்பால அடிப்பான்.
இவனுங்கள காப்பி அடித்த நம்மூர் டுபாகூர் திக/திமுக அதே கம்மி களின் விளம்பர உத்தியை சரியாக பிடித்தனர். (உ.ம.படங்களை காண்க) அதே போல் முட்டாள் கூட்டத்தை வளர்த்தனர். பலன் இன்று ஒரு திமுக வின் கொள்கை என்னவென்று கேளுங்கள். ஒரு பயலுக்கும் தெரியாது. எல்லாம் ... ப்ப..பபப்பே தான். ஸ்டாலினே அந்த நிலைதான். என்ன செய்ய? இருந்தாத்தானே சொல்ல?
கழகங்களுக்கும் கம்மிகளுக்கும் ஒற்றுமை
ரெண்டு பேருக்கும் ஜனநாயகம் பிடிக்காது.
இருவருக்கும் வேற்றுமை
கழகம் ஒரு தனியார் குடும்ப கம்பெனி. - வட கொரியா போல !
கம்மிகள் ஒருகாலத்தில் வெளிநாட்டார் கம்பெனியாக இருந்து இப்போ சுருங்கி போன கூலிப்படை.!
விழித்துக் கொள்ளுங்கப்பா !!! இல்லைன்னா விடிவே கிடையாது !
ரவி சுந்தரம்
23/01/2019

Thursday, January 10, 2019

தேசியத்தை சிதைத்தவர்கள்:-


இதை கொஞ்சம் ஆழமாக பார்ப்போம்.

தனிமனிதனை விட தேசம் பெரியது எனும் முக்கியமான நிலையை முதலில் உடைத்தது
நமது பெருமைக்குரிய இந்திரா காங்கிரஸ்.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை இவர்களுடையது...நேரு காலம் வரை இந்தியாவின் சுதந்திரத்திற்காக தியாகம் மூத்த தலைவர்கள் பெயரை நாட்டின் முக்கியமான சாலைகளுக்கும் கூடங்களுக்கும் வைக்கும் முறை தொடங்கியது. இதில் தவறில்லை.. ஆனால் இந்திரா காலத்துக்கு பிறகு இந்த துதி பாடல் கும்பல் மெல்ல இந்த முறையை திருப்பி அரசின் எல்லா திட்டங்களுக்கும் தங்கள் தலைவி தலைவன் பெயரை சூட்டி ஏதோ இவர்கள் அப்பன் வீட்டு பணத்தில் இருந்து தருவதை போல் செய்ய தொடங்கினர். இது முற்றிலும் முழுமையாக் அடிமைகளின் செயல்பாடுகளே அன்றி வேறில்லை.  இதை பாமர மக்கள் ஆரம்பத்தில் இதை நம்பவே செய்தனர். அரசு வேறு. கட்சி வேறு என்பதை புதைக்க தொடங்கினர்.  கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதும் அரசின் திட்டங்களுக்கு பெயர் வைப்பதையும் குழப்பி இந்திரா அவாஸ் யோசனா, ராஜீவ் காந்தி அது.. ஜவஹர்லால் நேரு இது...என்று ஒரே குடும்ப பஜனை.


எல்லாவற்றிலும் இந்திராவை தொடரும் நம்ம கருணா நிதி இதையம் சரியாக பயன்படுத்தி கொண்டார். அங்காவது செத்து போனவர்களின் பெயர்களில் பஜனை நடந்தது. ஆனால் கருணா ஒரு படி மேலே சென்றார்.  அங்கே காந்தி நேரு என்றால் இங்கே பெரியார் மற்றும் அண்ணா பெயரால் பஜனை தொடங்கப்பட்டது. கருணாநிதிக்கு தெரியும் அது கடைசியில் தன் பெயரில் முடியும் என்று !!


ஆனால் தமிழன்தான் வித்தியாசமானவன் ஆயிற்றே ! தன் சிலையை தானே வெட்கமில்லாம திறந்து கொண்டதும் (டி.நகர்) இல்லாமல் தனது ஆத்ம சீடரான கருணாநிதிக்கும் சிலைக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வே.ராமசாமியை கொண்டாடும் பூமியாயிற்றே !


சீடர் தான் பதவியேற்றவுடன் தனது அரசு எடுத்த அனைத்து சமுக நல திட்டங்களுக்கும் தனது பெயரை சரியாக இணைத்து கொண்டார்.

உ.ம. கலைஞர் கண்ணொளி திட்டம்

சென்னை அசோக்நகர் விரிவாக்கத்திற்கு 1972ல் ஒரு அரசாணை மூலம் கலைஞர் கருணாநிதி நகர் என்று பெயரிட்டு மகிழ்ந்தார். தமிழகத்தில் முதன் முதலில் வந்த கே.கே.நகர் அதுவே..
நந்தனத்தில் தமிழக அரசால் கட்டப்பட்ட பல அடுக்குகள் கொண்ட அலுவலக கட்டடிடத்திற்கு கருணாநிதி மாளிகை என்று பெயர் சூட்டிக் கொண்டார். அது பெரிய பிரச்சனையாகி பின்னாளில் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அது பெரியார் மாளிகையானது.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் அரசின் எல்லா திட்டங்களுக்கும் இவர்களின் பெயரை வைத்துக் கொண்டதன் நீட்சி ரேஷன் கடை பையில் பொங்கலுக்கு வரும் பொருள்களின் பையில் இவரின் படம் என்று வந்தது..

இது எதில் வந்து முடிந்தது என்றால் மத்திய அரசின் பெரும் பங்களிப்பில் ஒவ்வொரு மாநிலத்தில் தொடங்கப்பட்ட அவரச உதவி ஆம்புலன்ஸ் சேவைக்கும் “கலைஞரின் 118 அவசர உதவி”  என்று ஜால்ராக்கள் அழைக்க இவர் மகிழ்ந்தார்.  

இவர்கள் இப்படி என்றால் அதிமுக சும்மா இருக்குமா?
எம்.ஜி. ஆர். உயிருடன் இருந்தவரை தன் பெயரில் எதுவும் நடத்தப் படுவதை விரும்பவில்லை. தடுத்தார். அரசின் உதவிகளை பெரும்பாலும் தமிழக அரசின் திட்டங்கள் என்றே அழைத்தார். அண்ணா அல்லது பெரியார் பெயரை மறைக்கிறார் என்று திமுக கூவியதை முடிந்த மட்டும் சமாளித்தார். முடியாத போது அண்ணா பெரியார் என்று பெயர்கள் சூட்டப் பட்டன.

ஆனால் ஜெயா வந்தவுடன் இவர் ஆம்பிளை கருணாநிதியாகி போனார். இன்னும் சொல்லப் போனால் ஒரு படி மேலே போய் எல்லாவற்றிலும் அம்மா.. மிக்சி,கம்ப்யுடர், கிரைண்டர் குடம் ஐயோ..ஐயோ  ..சகிக்க முடியவில்லை.  பொதுக்கழிப்பிடத்துக்கு மட்டும்தான் அம்மா பொதுக்கழிப்பிடம் என்று சொல்லவில்லை.  அத்தனை அசிங்கம்.

இப்படி தனிமனித துதி பாடலை வளர்த்தால் தேசியம் நாட்டுப் பற்று எப்படி நினைவுக்கு வரும்?
எல்லாவற்றுக்கும் இவர்கள் மற்றும் இவர்களின் தாய் தந்தையரின் பெயரை வைத்து மக்களிடம் கொண்டு சென்றால் மக்கள் அவர்களறியாது இவர்கள் ஏதோ சொந்த காசில் தங்களுக்கு உதவுகிறார்கள் என்றல்லாவா நினைப்பார்கள்?
இது அரசின் பணம், நமது வரிப்பணம் அதிலிருந்துதான் இவையெல்லாம் கிடைக்கிறது என்பதையே மறக்கடித்து விட்டனர்.

இது போல் வேறு எந்த மாநிலத்திலாவது நடந்ததுண்டா?  உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் கூட தன் பெயர் போட்டுக் கொண்ட தலைவர்கள் உண்டா?

கர்நாடகாவில் பொம்மை உயிர் காப்பிடு திட்டம் அல்லது ஹெக்டே பயிர் பாதுகாப்பு திட்டம் என்று ஏதாவது உண்டா?  ஆந்திராவில் என்.டி.ஆர். கிராம நல திட்டம் என்று ஏதாவது உண்டா? 

சிந்தியுங்கள் தமிழர்களே ! 
இந்தியரை கருத்தியலால் மடையர்களாக்கிய வெள்ளையரின் செய்கைக்கு சற்றும் குறையாதது  இந்த இந்திரா மற்றும் கருணாநிதி தொடங்கி வைத்த தனி மனித துதி பாடும் முறை. !

இதிலிருந்து மீண்டு வாருங்கள்.! 
அரசு வேறு...அரசியல் கட்சிகள் வேறு.
தனிமனிதர்களை விட நாடு பெரிது.
பெரிதும் பெரிது பேணுவோம்.

ரவி சுந்தரம்
#Indian_Nationalism

கோவில் ஒழுக்கம் !


#கோவில்_ஒழுக்கம்.
#temple_dicipline

எச்சரிக்கை :- பெரிய பதிவு !

இன்றைய முக்கால்வாசி இளம் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு என்பது பற்றி ஒரு மண்ணும் தெரியவில்லை.
குழந்தைகளின் இஷ்டத்துகெல்லாம் ஆடினால் சிறப்பான பெற்றோர்கள் என்று நினைக்கிறார்கள். இது அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கு வெடி வைக்கும செயல் என்று தெரிவதில்லை.

குழந்தை வளர்ப்பு என்பது கடல் போன்றது என்றாலும் நேற்று நடந்த ஒரு விஷயத்தை பார்ப்போம்.

நேற்று மார்கழி மாதத்தின் முதல் நாள் !
ஆண்டாள் பாசுரம் பாடி எம்பெருமாளை பள்ளியேழுப்பி தரிசனம் செய்ய மனைவியுடன் சென்றேன்.

அமைதியான காலை நேரம் பக்தி மிக்க ஒரு சிறு கூட்டம் இந்த அடாத குளிரிலும் குளித்து முடித்து கோவிலில் சரியான நேரத்துக்கு ஆஜர்.


திருப்பாவையை பாட ஆரம்பித்து ஒரு 5 பாசுரங்கள் தாண்டியிருக்காது. ஒரு இளம் தம்பதியினர் தங்களின் 4 வயது குழந்தை மற்றும் ஒரு வயது குழந்தையுடன் அவசர அவசரமாக வந்து கூட்டத்தில் அமர்ந்தனர். உடனே புத்தகத்தை திறந்து கொண்டு படிக்க தொடங்கினர்.


அப்போதுதான் பிரச்சனை கிளம்பியது. அந்த இளம் தாயார் குழந்தைகளை கீழே இறக்கி விட்டு மறந்து விட்டார். பெரிய கோவில். பளிங்கு தரை.. குழந்தைகள் ஓடி விளையாட ஆரம்பித்தன. ஒரே சத்தம். வீல் ..வீல்..என்று அந்த குழந்தை . அங்கும் இங்கும் ஓடி கையில் கண்டதையெல்லாம் உருட்ட தொடங்கியது.
அது Fire Extinguisher ஒ..அல்லது இரும்பு Chair ஒ...எல்லாவற்றையும் இழுத்தது.
குழந்தைக்கு என்ன தெரியும் பக்க விளைவுகள் ?


பாடிக் கொண்டிருந்தவர்களின் கவனம் கலைந்தது. பெரும்பாலோர் நெளிய ஆரம்பித்தனர். ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெற்றோர் கவலையே படவில்லை. யார் வீட்டு குழந்தையோ என்று இவர்கள் தலையை குனிந்து கொண்டு சாமி கும்பிடுகிரார்களாம் !!


பிறகு என் மனைவி அந்த இளம் தாயை ஒரு பார்வை பார்த்த பிறகு அந்த பெண் எழுந்து போனாள். அப்போதும் அவர் குழநதைகளின் கவனத்தை திருப்பவோ அமைதி படுத்தவோ முயலவில்லை. மறுபடியும் மறுபடியும் பின்னாடியே போய் கொண்டிருந்தார். இத்தனை கூத்துகளுக்கு நடுவே அந்த இளம் தந்தை கவலையே படாமால் உட்கார்ந்திருந்தார். அந்த இளம்தாயோ தம் குழந்தைகள் செய்வதை எல்லோரும் ரசிப்பதாக நினைத்து பெரும் சிரிப்புடன் மகிழ்ந்திருந்தார்.

நாங்களும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக பாசுரங்களை பாடி முடித்தோம்.

பிறகு பூசைகள் முடிந்தவுடன் நான் அந்த இளம் தந்தையை அணுகி என் எண்ணங்களை கொட்டி விட்டேன்.
கோவிலுக்கு வந்தால் கொஞ்சம் குழந்தைகளுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
கோவில் உங்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் சொந்தம்.
வீட்டில் கூச்சலிட்டு ஓடி விளையாடுவதை போல் கோவில் ஒரு விளையாட்டு திடல் அல்ல. இது அமைதியாக கடவுளை நாடும் இடம். மற்றவர்களின் அமைதியை கெடுக்க உங்களுக்கு உரிமை இல்லை.
இதே போல் ஒரு சினிமா தியேட்டரில் உங்கள் குழந்தைகளை சத்தமாக ஓடியாட விடுவீர்களா? 
தியேட்டர்காரன் புடிச்சு வெளியேத்திடுவான்.
அதை விடுங்கக்...வீட்டில் தமிழ் சீரியல் அல்லது கிரிகெட் மேட்ச் பார்க்கும் போது குறுக்கும் நெடுக்கும் ஓடி சத்தம் போட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?  கோவில் என்றால் என்ன இளக்காரமா ?

அந்த இளம் தந்தைக்கு வருத்தமாக கூட இருக்கும். ஆனால் நான் சொன்னதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

நடுவில் ஒருத்தர் வந்து சொன்னார்.
சார்........குழந்தையும் தெய்வமும் ஒன்னு சார்.....அட்ஜஸ் பண்ணி போங்க...

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!

நான் கேட்டேன் :- அப்ப...ஏன் சார்...கோவிலுக்கு வர்றீங்க?? .குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே!!  ..அப்ப உங்க வீட்டில் உங்க குழந்தைகள் முன்னாடி பாசுரம் பாடி கொள்ளுங்களேன்..

அவர் அதை ரசிக்கவில்லை என்று தெரிந்தது.

உண்மையில் குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான். ஆகவே குழந்தைகள் வைத்திருப்போர் ஒரு பருவம் வரை குழந்தைகளை கவனமாக வளருங்கள். தெய்வம் உங்கள் பின்னால் தானே வரும்.
ஆனால் நீங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் அடுத்தவன் அமைதியை கெடுப்பது ஏன்?

இன்னும் சிலர் கோவில் வந்து குழந்தைகளை வைத்துக் கொண்டு சாமிக்கு முதுகை காட்டிக் கொண்டு செல்பி எடுப்பது !!
என்ன கருமமோ ? 

நான் கண்ட வரையில் இந்த கூத்துகளெல்லாம் இந்த “நியோ ரிச்” ஆனா இளம் மென்பொறியாளர்களிடையே மிக அதிகம். இரண்டு லைன் கோடிங் எழுத தெரிந்தால் எல்லாம் அறிந்தோம் எனும் மிதப்பு. .
இளம் பெற்றோகளிலும் இளம் தாய்மார்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.


கோவிலை நாம் பெரும் முக்கியம் வாய்ந்ததாக கருதுவதில்லை.
இது மற்ற மதங்களில் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.
நாம்தான் கோவிலில் குப்பை போடுவோம். வரிசையில் நிற்க மறுப்போம். கோவிலில் நடப்பவற்றுக்கு காசு கொடுப்பதுடன் நம் கடமை முடிந்தது என்று சென்று விடுவோம். இலவச சேவை செய்ய வரமாட்டோம்.  இத்தனையும் செய்துவிட்டு நாம் பக்திமான்கள் என்று பிதற்றி பெருமை கொள்வோம். இன்னும் நிறைய சொல்லலாம். படிக்கத்தான் நேரம் நமக்கிருக்காது.

ஒரு சிம்பொனி நடக்கும் இடமோ, ஒரு நாடகம் நடக்கும் இடமோ கூட அமைதியை கோருகிறது. ஆனால் இறைவனை ஒரு பெரும் இரைச்சல் கூச்சலுக்கிடையே எப்படி தேடுவது?  இசையில் இறைவனை நாடலாம். இரைச்சலில் இறைவனை எங்கனம் தேடுவது ?

சிந்திக்க மறுக்கும் மனமே இரைச்சலை நாடும்.

புரிந்தவர்கள் புண்ணியவான்கள் !
நன்றி.
ரவி சுந்தரம்.

பி.கு:- நான் மேலே சொன்னது பெரும்பான்மையான தறுதலை பெற்றோரை பற்றியே !! எல்லா நல்ல குணங்களுடன் சமுகத்தின் நலம் சார்ந்து நடந்து குழந்தைகளை வளர்க்கும் இளம் பெற்றோரை பற்றி அல்ல. அவர்களுக்கு என் வந்தனங்கள்.

Ravi sundaram
#Temple_dicipline


ஒரு பெரிய சட்ட அனுபவம்.


கொட்டாவி விடாம படிங்க. :)


78ன் கடைசியில் எங்கள் வீட்டருகில் ஒரு சம்பவம்.


என் நண்பனின் வீட்டுக்கு மேல் வீட்டில் என் தந்தையின் நண்பர் (ஒரு வக்கீல்) தன் வயதான தாய், மனைவி மற்றும் மகனுடன் இருந்தார்.


ஒரு மதியம் அந்த வக்கீல் அலுவலகம் சென்ற சமயத்தில் இது நிகழ்ந்தது.


எங்களுக்கு விடுமுறையாதலால் நாங்கள் ஒரு 5 பேர் பக்கத்தில் தெருமுனையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம்.


திடிரென்று "ஐயோ..அவனை புடிங்க..வனை புடிங்க" என்று அந்த வக்கீல் இருக்கும் வீட்டில் இருந்து வந்தது. நாங்கள் ஓடி சென்று பார்க்கும் போது ஒரு நபர் கையில் பையுடன் மாடி படி இறங்கி எங்களை தாண்டி ஓடினான்.


பால்கனியில் இருந்து கத்தி கொண்டிருந்த கிழவின் தலையில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அதே சமயம் பக்கத்து பில்டிங் மாடியில் குடியிருந்த பெண்மணி ஓடி வந்தார்.
ஒரே குழப்பம். புடிங்க...புடிங்க என்று எங்களை தாண்டி ஓடியவனை கை காட்டினார்.


நாங்க ஓடி போய் சிறிது தூரத்தில் அவனை பிடித்து இழுத்து வந்தோம். ஒரு 30 வயது மதிக்க தக்க ஆளு முன்னுக்கு பின்னே உளறினான். அவன் பையை சோதித்த போது பேப்பரில் அழகாக இரண்டு மூன்று தடவை சுருட்டப் பட்டு ஒரு இரும்பு குழாய் இருந்தது. அதில் ரத்த கரையும் இருந்தது.


அவனை பக்கத்தில் கம்பத்தில் கட்டி போலிசுக்கு சொல்லிவிட்டோம். யாரும் அவனை பெரிதும் தாக்காமல் பார்த்து கொண்டோம். அப்பவும் பக்கத்து குடிசை மாற்று பகுதியில் இருந்து வந்தவர்கள் அவனை கடுமையாக தாக்க முற்பட்டனர். அவர்களிடம் இருந்து அவனை காப்பாற்றுவதே பெரும் பாடாக இருந்தது.


இரண்டு காவலர்கள் சைக்கிளில் வந்தனர். அப்போது அந்த பகுதி விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் அந்த காவல்நிலையம் செங்கல்பட்டு கிழக்கு சரகத்தில் வந்தது. அடிபட்டது ஒரு வக்கீல் அதுவும் சிபிஐ அலுவலகத்தை சேர்ந்தவர் என்று கூறிய பிறகுதான் வேகமாக வந்தனர்.


வந்த காவலர்கள் அசுவாரசியமாக அவனை அழைத்து சென்றனர்.முறையாக புகார் கொடுத்ததும் எங்களையெல்லாம் சாட்சியாக கையெழுத்து வாங்கி சென்றனர்.


அடிபட்ட பெண்மணியை அதற்குள் முதலுதவி செய்து மருத்துவ மனைக்கு அழைத்து சென்றோம். தாமதமாக காவலர்கள்..ஏம்பா..அடிபட்ட அம்மா எங்கே...அதுக்குள்ள எப்படி ஆஸ்பத்திரிக்கு கூட்டி கிட்டு போனீங்க ன்னு சும்மா உதார் விட்டுவிட்டு போனார்கள்.


அந்த பெண்மணி உடைந்த மண்டை சரியாக 5 மாதத்திற்கு மேல் ஆனது. அது தனி கதை. குற்றவாளி கைது செய்யப்பட்ட அன்றே ஜாமீனில் வெளி வந்தான் என்று பிறகு தெரிந்து கொண்டோம்.


ஆனால் விஷயம் இனிமேல்தான் இருக்கு.


சுமார் 9 மாதம் கழித்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு வழக்கு வந்து பல வாய்தாகளுக்கு பிறகு 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சிகளை விசாரிக்க எங்கள் முறை வந்தது. அன்றுதான் ஒரு செஷன்ஸ் கோர்ட் நடக்கும் விதம் கண்டேன்.


சுஜாதா கதையெல்லாம் படித்து வக்கீல்களை பற்றி இருந்த பெரிய மரியாதையெல்லாம் தவிடு பொடி !
ஒற்றை வரி.....கேவலம்!


பேரு விவரமெல்லாம் கெட்ட பிறகு ...
நீங்க அந்தம்மாவுக்கு என்ன உறவு?
உறவு இல்லீங்க...தெரிஞ்சவங்க..
எப்படி தெரிஞ்ச்சவங்க !
அட...இது என்ன கேள்வி? என் நண்பன் வீட்டு மாடியில் இருப்பவர்கள். என் தந்தையின் நண்பரின் அம்மா என்ற அளவில் ....


நீங்க அந்தம்மாவை அடிச்சத பார்த்தீங்களா ?


இல்லை. ஆனால் இவர் அந்த வீட்டில் இருந்து ஓடியதை பார்த்தோம்.


கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க தம்பி..என்றார் அந்த அழுக்கு கோட்டு போட்டு பல்லு குத்தி கொண்டிருந்த நாத்தம் புடிச்ச வக்கீல்..


அப்பறம் என்ன நடந்தது. என்றார்.


விவரமா சொன்னோம்.


சரி..இப்ப நான் நடந்தது என்ன என்று சொல்லட்டுமா ?


அந்தம்மா கத்தின உடனே நீங்க ஓடி ரோடில் வெறுமனே நடந்து கொண்டிருத்த இந்த ஆளை புடிச்சு கட்டி வைச்சு அடிச்சிருக்கீங்க....சரியா...


இல்லைங்க...அவரு அந்த வீட்டில் இருந்து ஓடியதை பார்த்து துரத்தி.....


ஸ்ஸ்ஸ் ..ஆமாம். இல்லை...என்றுதான் சொல்லணும். கேட்ட கேள்விக்குதான் பதில் சொல்லணும் என்று இடைமறித்து கடுப்படித்தார்.
மேலே சொல்ல விடாமல் துரத்தி விட்டார்.


உணவு வேளைக்கு பிறகு வந்த கேஸ் என்பதால் பப்ளிக் பிராசிக்யுடர்...தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.


வெளியே வந்தவுடன்..போலீஸ்காரர்..காவி பல் தெரிய சிரித்து கொண்டே..சிகரெட் இருக்கா என்று கேட்டு....இதெல்லாம் நிக்காது தம்பி என்றார்.


வெறுப்பாக இருந்தது..


அடிபட்ட அந்த வயதான தாயை கூண்டில் ஏற்றினர்.
வழக்கமான அறிமுக கேள்விகளுக்கு பிறகு
என்ன நடந்ததும்மா? என்றால் கடைசியாக


இந்த ஆள் கதவை தட்டி ஏதோ பேரை சொல்லி அவர் இருக்கிறாரா என்று கேட்டார்.
நான் இல்லை என்றேன்.
சரி..கொஞ்சம் தண்ணி கொடுங்கள். தாகமா இருக்கு என்றார்.
சரி..இருங்கள் என்று சொல்லி திரும்பி சமையல் அறைக்கு சென்று தண்ணி எடுத்து திரும்ப பார்த்தேன். அப்போதுதான் இவர் பின்னாலேயே வந்து என் கழுத்தை என் வீட்டில் கிடந்த துணியாலேயே வைத்து இறுக்க முனைந்தார்.
நான் போராடினேன்.
அந்த சமயத்தில் இந்த போராட்டத்தை பின் வீட்டு ஜன்னலில் இருந்த பெண்மணி பார்த்து சப்தம் போடா இந்த ஆள் தன் கையிலிருந்து ஏதோ கொண்டு என் தலையில் அடித்தார்.


எத்தனை முறை அடித்தார்? கேள்வி..


4 அல்லது 5 முறை ..


4 ஆ..அல்லது 5 ஆ...


நினைவில்லை..ஆனால் ரத்தம் என் சேலையில் விழுவதை பார்த்தேன். நான் தடுமாறி விழப்போனேன்.


அதற்குள் அந்த ஆள் ஓடி போய் என் வீட்டு கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு ஓடி விட்டார்.
அருகிலேயே பால்கனி இருந்ததால் நான் பால்கனியில் வந்து சத்தம் போட்டேன்...
என்று விவரித்தார்.


அந்த வக்கீல் இன்னும் சில அபத்த கேள்விகளை கேட்டு ஒற்றை வரியில் பதில் சொல்ல வற்புறுத்தி வெறுப்பேற்றினார்.
இதில் எதிலுமே சம்பந்த மில்லாத மாதிரி
அந்த வட்டார மாஜிஸ்டிரேட் பாதிநேரம் உண்ட மயக்கத்தில் இருந்தார். அடிக்கடி தலையை சொரிந்து கொண்டு தூங்கி வழிந்தார்.


எல்லாம் மெதுவாக அசுவாரசியமாக கடனே எழவே என்று நடந்தது. குற்றவாளியும் ஊருக்கு அடுத்த பஸ் எப்போ என்று கடிகாரத்தை பார்த்து கொண்டிருந்தார்.


வெய்யிலும், தூசும், எங்கும் அப்பி கிடந்தன..சாயம் போன சிவப்பு துணி அந்த நீதிபதி மேஜையை சுற்றி போர்த்த பட்டிருந்தது. நீதிபதியின் பின்புறம் காரை போன சுவற்றில் காந்தி சோகமாக சிரித்தார்.


நல்லவேளை...அப்போது மொபைல் இல்லை. இருந்திருந்தால் எல்லோரும் அதை நோண்டி கொண்டிருப்பார்கள்.


கடைசியில் அந்த வயதான தாயின் முன் அந்த வக்கீல் ஒரு எதிர் வாதம் வைத்தார். அதுதான் இந்த வழக்கு எப்படி போகுதுன்னு எங்களுக்கு புரியவைத்தது.


இதை பாருங்கம்மா...நீங்க சொன்னதெல்லாம் பொய்!


இந்த ஆள் உங்க வீட்டில் கிழே வந்து வெய்யிலுக்கு இளைப்பாற உட்கார்ந்து கொண்டிருந்தார். பிறகு உங்களிடம் தண்ணி கேட்டார். அவர் உங்க ஜாதி இல்லை மற்றும் தாழ்ந்த சாதி என்பதால் நீங்கள் அவரை எழுந்து போகும்படி விரட்டினீர்கள். மேலும் ஜாதி சொல்லி திட்டி விரட்டினீர்கள்.
அவர் மறுக்கவே...நீங்களும் உங்க ஆள்களும் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தினீர்கள் என்று சொல்கிறேன். பிறகு பொய்யான குற்றம் சொல்லி காவலரிடம் ஒப்படைத்தனர் என்கிறேன்.. இதுதான் நடந்தது என்றார்.


இதை கேட்டு ஒரே நொடியில் ச்சே...என்று ஆகிவிட்டது.


இந்த முட்டாள் வக்கீலின் வாதத்தில் எத்தனை ஓட்டைகள் பாருங்கள்.


அடிபட்ட அந்த வயதான அம்மாவுக்கு குற்றவாளியின் ஜாதி எப்படி தெரியும்.?
அந்த அம்மா தலையில் அவரே அடித்து கொண்டாரா?
அடுத்த வீட்டு ஜன்னலில் (10 அடி தூரம்) இருந்து பார்த்த அந்த பெண்மணி குருடா?
அந்த வீட்டில் இருந்து ஓடியதை பார்ந்த நாங்கள் 5 பெரும் குருடா?
அந்த குற்றவாளியின் கையில் இருந்த ஆயுதத்தில் இருந்த ரத்தம் பொய்யா?
எத்தனை சாட்சிகள்?...எத்தனை ஆதாரங்கள்?


எல்லாவற்றையும் ஜாதி என்கிற இல்லாத ஒற்றை பொய் குற்றசாட்டில் கடக்க முயன்ற அந்த வக்கீலின் கயமை முகத்தில் அறைந்தார் போன்று வாயடைக்க வைத்தது. இந்த பார்வையில் வழக்கில் எதிர்ப்பார்கள் என்று நினைத்தே பார்க்க வில்லை. உறைந்து போனோம்.


இந்த குற்றசாட்டுக்கு ஒரே ஒரு காரணம்தான்.
அந்த வயதான பெண்மணி ஒரு அய்யர் வீட்டு பெண்மணி.
இன்றுவரை அந்த குற்றவாளி என்ன ஜாதி என்று கேட்க தோன்றவில்லை.


எல்லாவற்றையும் விட கொடுமை..நாங்கள் வெளியே வந்த போது ஜாமீனில் இருந்த குற்றவாளியின் கூட வந்தவங்க கான்ஸ்டபிளுடன் சிரித்து கொண்டே...என்ன கொலையா செஞ்சுட்டாங்க....ரெண்டு தட்டு அதான் புடிச்சீங்க..அடிச்சீங்க..விட்டுட்டு போக வேண்டியதானே.....இதுகேன்னவோ..இத்தனை பேர் வந்த சாட்சி சொல்லி அலைகழிச்சு”..... என்று சத்தமாக சொன்ன போது பி.பி.யும் சிரித்தார். வெறுப்பின் உச்சத்திற்கே சென்றோம்.


அன்று கொஞ்சம் மாற்றி நடந்திருந்தால் அந்த கிழவியும் இறந்திருக்கும். நாங்கள் தடுக்காவிட்டால் குற்றவாளியை அடித்தே கொன்றிருப்பார்கள். இதை யாருமே நினைக்கவில்லை.


வழக்கின் தீர்ப்பு என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.??


அதற்கு அப்புறம் நாலுமுறை கோர்ட்டுக்கு அந்த பி.பி. ஏதேதோ (காரணம்....மச்சினிக்கு உடம்பு சரியில்லை என்பது போன்ற) அபத்த காரணங்கள் சொல்லி வர வில்லை. இத்தனைக்கும பாதிக்கப்பட்டவர் ஒரு நேர்மையான சிபிஐ பப்ளிக் பிராசிகியுட்டர். ஆனால் அவராலும் ஒன்று செய்ய முடியவில்லை.


பொறுக்க முடியாமல் நீங்க ஏன் சார்..ஒன்னும் பண்ணல என்று கேட்டேன்.
அவர் சொன்னார்...உள்ளூர் பி.பி. ஒவ்வொரு முறையும் காசு எதிர்ப்பார்க்கிறார். அம்மாவின் தலை காயத்திற்கு செலவு செய்ததே அதிகம். இதில் ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கு கேஸ் வரும் போதும் அங்கு வரும் இன்ஸ்பெக்டர் அல்லது கான்ஸ்டபிள் முதல் பி.பி. வரை கோர்ட்டு கிளார்க் முதல் எல்லோருக்கும் காசு அழ வேண்டியிருக்கு.


அதான் அலுத்து போய். நமக்கு வேலை இருக்கு...அதுக்கு அலைவாமா இவிணுங்க பின்னாடி சுத்துவோமான்னு ...நாசமா போ..என்று விட்டுவிட்டேன். என்றார்.
.
முதல் கோர்டிலேயே சோர்ந்து போன ஆட்கள் மேல் முறையீடா செய்யப் போகிறார்கள் என்கிற தைரியத்தில் சரியான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.
அதற்கு அந்த ஆளிடம் காசு வாங்கப்பட்டது என்றும் சொன்னார்கள்.


மேலே சொன்ன வழக்கு...ஒரு சின்ன உதாரணமே...
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ஆயுதம் போன்ற உறுதியான சாட்சிகளுடன் கூடிய ஒரு சாதாரண வழக்கிலேயே இந்தியாவில் ஜாதியும் மதமும் எப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபயோகப் படுத்தப் பட்டது என்று புரிந்த நாள் அன்று.
அப்போவே ..அப்படி!!!!
இப்ப.... :(


நன்றி
ரவி சுந்தரம்.