Friday, August 20, 2010

பயங்கள் நிஜங்கள் ஆகும் அவலம்!

தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் வரவு பற்றி என்னுடைய கவலை கீழ்கண்ட செய்தியினால் மேலும் உறுதிபடுகிறது!

கீழ் கண்ட செய்தி "ரிப்போர்டரில்" வந்தது.



பால்குடியை மறக்காத இரண்டே வயதான பெண் குழந்தையை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியிருக்கிறார்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்.இந்தக் கொடூரம் நிகழ்ந்தது பீகாரில் அல்ல.... தமிழகத்தில்தான்! ‘இனி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது’என்று கலெக்டரிடமும் புகார் கொடுத்திருக்கிறார்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ளது கணேசபுரம் மற்றும் முல்லை நகர். சிட்கோவில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இங்குள்ள வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தங்கியுள்ளனர். இதில் பீகார் மாநிலம்,சபாரியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரா, திரிலோகி மற்றும் விக்ரம் ஆகிய மூன்று பேரும் முல்லை நகரில் ஒரு வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருந்த குடியிருப்பில் இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் காணாமல் அதன் பெற்றோர் அல்லாடித் தேடி யலைந்திருக்கிறார்கள்.

அப்போது தர்மேந்திராவும்,அவன் நண்பர்களும் தங்கியிருந்த வீட்டிற்குள்ளிருந்து வீலென்று குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. பதறித் துடித்த குழந்தையின் தாய் அந்த வீட்டிற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்திருக்கிறார். அங்கே, கதறியபடி அந்தக் குழந்தை கிடந்திருக்கிறது. அதைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தால் அதன் தொடை, காலெல்லாம் ரத்தமும், ரத்தக்காயங்களும் இருந்துள்ளன. அதிர்ந்துபோன குழந்தையின் தாய் அங்கிருந்த தர்மேந்திரா உள்ளிட்ட மூவரிடமும் என்ன நடந்தது என்று கேட்க,அவர்கள் மொழியில் ஏதேதோ உளறியிருக்கின்றனர்.

அதன்பிறகு குழந்தையை மருத்துவரிடம் எடுத்துக்கொண்டு பெற்றோர் ஓட, அவர் அதைப் பரிசோதித்துவிட்டு, ‘யாரோ பாலியல் வன்முறைக்குக் குழந்தையை ஆளக்கியிருக்கிறார்கள்!’என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். பெற்றோரும், அந்தப் பகுதி மக்களும் ஆத்திரத்துடன் அந்த வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் செ ன்றுள்ளனர். அதற்குள் அவர்கள் எஸ்கேப் ஆகிவிட,போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, போலீஸார் பல்வேறு இடங்களில் தேடியலைந்து தர்மேந்திரா,திரிலோகியைக்கண்டுபிடித்து விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்ததில், மூன்று பேரும் அன்று நல்ல குடிபோதையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருக்க, அதைத் தூக்கி வந்து வீட்டிற்குள் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.பிடிபட்ட இருவரையும் சிறையில் அடைத்த போலீஸ், தப்பிச் சென்ற இளைஞரைத் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி,முல்லை நகர் மட்டுமல்லாமல் அதன் அருகாமையில் உள்ள கணேசபுரத்திலும் பரவ,அங்குள்ள மக்கள் கொதித்துப் போனார்கள். .

‘வாடகைக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களை குடிவைத்து விடுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் அட்டூழியம்தான். இவர்களை இனியும் ஊ ருக்குள் வைத்திருந்தால் எங்கள் ஊரில் பெண்கள் மட்டுமல்ல, பெண் குழந்தைகளும் வாழ முடியாது. அவர்கள் அத்தனை பேரையும் ஊரைவிட்டுக் காலி செய்ய வே ண்டும்!’ என்று கோரிக்கை வைத்து இங்குள்ள பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தை கடந்த திங்களன்று முற்றுகையிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இரவோடு இரவாக இந்தப் பகுதிகளில் உள்ள மக்களே எந்தெந்த வீடுகளில் பீகாரிகள் தங்கியிருக்கிறார்களோ அங்கெல்லாம் போய்அவர்களைத் துரத்தியடிக்கும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்கள். இதில அரண்டுபோன பீகார் இளைஞர்கள், தாங்கள் வேலை செய்யும் கம்பெனிகளில் தஞ்சமடைய அவர்களில் பலர் சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.அப்படிப் போக முடியாதவர்கள் தற்போது அந்தந்த கம்பெனிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ‘யாரோ தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த பீகாரிகளையும் ஊரைவிட்டே விரட்டுவது எப்படி நியாயமாகும்? எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்!’ என்று சொல்லி சில தொழிற்சங்கவாதிகளும், கம்பெனி அதிபர்களும் கோவையில் உள்ள உயரதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கலெக்டரிடம் புகார் செய்த பாரதி சுயஉதவிக்குழு ஊக்குனர் ராதாமணியிடம் பேசினோம்.“வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு சிறிய அறையில் இருபது பீகாரி களைத் தங்க அனுமதிக்கிறார்கள். தலைக்கு முந்நூறு என ஆறாயிரம் ரூபாய் வீட்டுக்காரர்களுக்கு கிடைக்கிறது. இப்படி அதிகமான வாடகை கிடைப்பதால் வீட்டுக்காரர்கள் இந்த பீகாரிகள் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதேயில்லை. ரோட்டில் வயதுப் பெண்கள் நடந்து செல்லமுடியாது.அவர்களைப் பார்த்து எங்களுக்குப் புரியாத மொழியில் கிண்டலடிப்பதும், சிரிப்பதும் நடக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு 13வயசுச் சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதை அக்கம்பக்கத்தவர்கள் பார்த்து சத்தம் போட, அந்த வீட்டில் குடியிருந்த பீகார்காரன்கள் அத்தனை பேரும் தப்பி ஓடிவிட்டார்கள்.இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று சொல்லி விட்டுவிட்டோம். இப்போது இந்தக் கொடுமை. இனிமேல் அவர்கள் யாரும் இந்தப் பகுதியில் இருக்கவே கூடாது’’ என்றார் ஆவேசமாக.

“சின்ன குழந்தையை அவனுக பலாத்காரம் செய்த சம்பவத்தைக் கேள்விப்பட்டாலே ரத்தம் கொதிக்குது.ஆனால்,அவனுகளுக்குப் பாதுகாப்புக் கோரி அலைகிறது ஒரு கூட்டம். இதை எப்படி அனுமதிக்க முடியும்? இதை நான் முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்குப் புகாராக அனுப்பியுள்ளேன்!’’ என்றார் தி.மு.க பிரதிநிதியான தினகரன்.



இதுபற்றி குறிச்சி நகராட்சித் தலைவர் பிரபாகரனிடம் விளக்கம் கேட்டபோது,“சில பீகார் இளைஞர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்தமாக அவர்களை அடித்து விரட்டி யிருக்கிறார்கள். அவர்களை எங்கள் கம்பெனிகளில் தங்கவைத்து பாதுகாப்புக் கொடுக்கிறோம். ‘அவர் களை வெளியே விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெவ்வேறு போராட்டங்களைச் செய்ய வேண்டிவரும்’ எனச் சொல்லி சில அமைப்புகள் மிரட்டுகின்றன. இதைச் சரிக்கட்ட பணமும் எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ‘எங்களிடம் வேலை பார்க்கும் பீகார்காரர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’என்று சொல்லி சில கம்பெனிக்காரர்கள் தலைவர் என்ற முறையில் என்னிடம் வந் தார்கள். அவர்கள் பாதுகாப்பை உயர் போலீஸ் அதிகாரிகளிடம்தான் கோரவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன். மற்றபடி அவர்களுக்காக நான் பரிந்து கொண்டு எந்த விஷயத்திற்கும் செல்லவில்லை!’’ என்றார் அவர்.
நன்றி:- ‍ ரிப்போர்டர்

ஏற்கனவே பம்மல் பல்லாவரம் போன்ற பகுதிகளில் இது போன்று பல செய்திகள் வந்துள்ளன.

இது போன்று இன்னும் பல சோகங்கள் பரவலாக செய்தியாகியுள்ளன.

அதிகாரிகளும் பொது மக்களும் விழிப்புடன் இருப்பது நல்லது.

Friday, August 13, 2010

கொலையும் கொலையைச் சார்ந்த‌ இட‌ங்க‌ளும்


சமிப காலங்களாக தமிழகத்தில் (இதன் செய்தியைத் தான் தினமும் வாசிப்பதால்) கொலை மற்றும் கொள்ளை அதிகமாக நடக்கத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமாக காதல், கள்ள காதல, பண விவகாரங்கள் மற்றும் பழிக்குப் பழி வாங்குதல் என்று சொல்லலாம்.

இப்படி காரணங்களை வகைப்படுத்தினாலும் ஒரு கொலை செய்யும் அளவுக்கு தமிழனின் மனம் இறுகிப் போவதென்பது இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.


முன்பெல்லாம் அத்தி பூத்தார் போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ ந‌ட‌ந்து வ‌ந்த‌ கொலை போன்ற‌ வ‌ன்முறைக‌ள் இன்று மிக‌ அதிக‌ அள‌வில் ந‌ட‌ப்ப‌த‌ற்காவே புள்ளி விவ‌ர‌ங்க‌ள் சொல்கின்றன‌. ம‌க்க‌ள் தொகை பெருக்க‌ம் ம‌ட்டும் இத‌ற்கு கார‌ண‌ம‌ல்ல‌. இதையும் புள்ளிவிவ‌ர‌ ச‌த‌விகித‌ங்க‌ள் நிருபிக்கின்ற‌ன‌


இந்த நிலைக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணமாக நான் நினைப்பதை ஆராய்வோம்.


சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழிற்சாலை மற்றும் பற்பல கட்டுமான பணிகளில் வேலை செய்ய பெருமளவு மற்ற மாநிலங்களிலிருந்து பணியாளர்கள் (பெரும்பாலும் படிக்காதவர்கள்) வந்து குடியேறுகின்றனர். மேலும் கணிணி மற்றும் ப‌ல்வேறு துறைக‌ளில் ப‌ணி செய்ய‌ ப‌டித்த‌ வெளிமாநில‌த்த‌வ‌ரும் பெரும‌ள‌வு குடியேறுகின்ற‌ன‌ர்.

வ‌ள‌ர்ச்சியின் பாதையில் போகும் போது இது போன்ற‌ குடியேற்ற‌ங்க‌ளை த‌வ‌ரிக்க‌ இய‌லாது என்ப‌து உண்மையே.

ஆனால் இப்ப‌டி வ‌ரும் வெளி மாநில‌த்த‌வ‌ர் வ‌ரும் போது த‌ம் மாநில‌த்தின் க‌லாசார‌த்தையும் அல்ல‌வா கூட்டி வ‌ருகின்ற‌ன‌ர். அதாவ‌து பிகார், ஒரிசா, ம‌ற்றும் ம‌த்திய‌ பிர‌தேச‌ மாநில‌த்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ட்டம், ஒழுங்கு, காவ‌ல் துறை இவையெல்லாம் கொஞ்ச‌ம் அந்நிய‌ப்ப‌ட்ட‌வை. த‌வ‌றாக‌ப் புரிந்து கொள்ளாதீர்க‌ள். இந்த‌ மாநில‌ங்க‌ள் பொதுவாக‌ பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ மாநில‌ங்க‌ள். இவைக‌ளில் பெரும‌ள‌வு இன்னும் பிர‌புத்துவ‌ம் ம‌ற்றும் ஆண்டான் அடிமை த‌த்துவ‌ம் ஊறி திளைக்கிற‌து. நில‌ப் ப‌ங்கீடு இன்னும் பெரிய‌ அள‌வில் விரிவ‌டையாத‌ அல்ல‌து முழுமையாக‌ நிறைவேற்ற‌ப்ப‌டாத‌ விஷ்ய‌ங்க‌ள்தான். அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை காவ‌ல்துறை பெரிதாக‌ ஒன்றும் சாதிக்காத‌, ஒரு கையாலாக‌த‌ துறையாக‌வே பார்க்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. வ‌ன்முறைதான் இவ‌ர்க‌ளுக்கு கால‌ம் கால‌மாக‌வே நீதியை நிலைநாட்டும் உத்தியாக‌க் கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ந்துள்ள‌து. இவையெல்லாம் வெள்ளைக்கார‌ன் கால‌த்திற்கு முன்பிருந்து (குப்த‌ சாம்ராஜ்ஜிய‌ கால‌த்திலிருந்து) வ‌ழிவ‌ழியாக‌ காண‌ப் ப‌ட்டு வ‌ரும் ச‌ரித்திர‌ உண்மைக‌ள்.

இவ‌ர்க‌ள் செய்வ‌து நியாய‌மா இல்லையா என்ப‌து வேறு விஷ்ய‌ம்.
ஆனால் அது த‌மிழ்க‌த்தை எப்ப‌டி பாதிக்கிற‌து என்ப‌து கேள்வி.

இப்ப‌டிப் ப‌ட்ட‌ வ‌ன்முறையில் ம‌ட்டும் ந‌ம்பிக்கை வைத்துள்ள‌ ஒரு க‌லாசார‌த்திலிருந்து வ‌ரும் இவ‌ர்க‌ள் இங்கே வ‌ந்த‌வுட‌ன் காணும் விஷ்ய‌ங்க‌ள் இவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து இந்த‌ ம‌ன‌நிலையேயே த‌ங்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ளை அணுக‌ உத‌வுகிறதா?.

அதாவ‌து ஊட‌க‌ங்க‌ளில் அறுவா தூக்குவ‌தை ஒரு "ஸ்டைலாக‌" பேணுவ‌தையும், கொலை செய்வ‌தை "த‌ர்ம‌மாக" நியாய‌ப்ப‌டுத்துவ‌தையும் இந்த‌ விருந்தாளிக‌ள் த‌மிழ‌க‌த்தின் க‌லாசார‌ம் என்றே நினைக்கின்றனரா?

த‌மிழ‌க‌த்தின் க‌லாசார‌ம் இதுவா?

இல்லையென்றே தோன்றுகிற‌து.

ச‌ரித்திர‌த்தை பார்க்கும் போது வ‌ன்முறை ந‌ம‌து க‌லாசார‌ம் இல்லையென்றே தோன்றுகிற‌து.

சுத‌ந்திர‌த்திற்காக‌ நாடே தீப்ப‌ற்றி எறிந்த‌ போது கூட‌ நாம் காந்திய‌ வ‌ழியில் அதாவ‌து சாதார‌ண‌ போராட்ட‌ங்க‌ளே அதிகம் ந‌ட‌த்தி ந‌ம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். வாஞ்சி நாத‌ன் ஒரு விதிவில‌க்கு.

ம‌ற்ற‌ப‌டி 1857ல் முத‌லாம் இந்திய‌ சுத‌ந்திர‌ போர் (சிப்பாய் க‌ல‌க‌ம் என்று வெள்ளைக்கார‌ன் சொன்னான்!) ந‌ட‌ந்த‌ போது கூட‌ அதை அட‌க்க‌ ந‌ம் சென்னை ராஜ‌தானியிலிருந்துதான் ப‌டைக‌ள் சென்று அட‌க்கிய‌தாக‌ வ‌ர‌லாறு.தொடர்ந்து தென்ன‌க‌ம் அமைதி பூங்க‌வா (மெய்யாலுமே!) இருந்து அத‌ன் ப‌ய‌னாய் ப‌ல‌ க‌லைக‌ளில் சிற‌ந்து விள‌ங்கிய‌த‌ற்கு ப‌ல‌ உதார‌ண‌ங்க‌ள் சொல்ல‌லாம்.

தென்னிந்தியா குறிப்பாக‌ த‌மிழ‌க‌ம் பெரிய‌ அள‌வில் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ ஒரே விஷ‌ய‌ம் இந்தி எதிரிப்பு ம‌ட்டுமே. அப்போது கூட‌ காவ‌ல்துறை சூட்டினால் பொது ம‌க்க‌ள் மாண்ட‌ன‌ரே ஒழிய‌ "செள‌ரி செள்ரா" போன்று ‌ ப‌டுகொலைக‌ள் பொது மக்களால் நிறை வேற்ற‌ப்ப‌ட‌வில்லை.

கோய‌ம்ப‌த்தூர் வெடி வைப‌வ‌ம் வேறு விஷ‌ய‌ம். (இதை த‌னியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும்.).



இப்ப‌டிப் ப‌ட்ட‌ த‌மிழ‌க‌த்தில் இன்று சுமார் 200 ரூபாய்க்கு ஒரு கொலை செய்ய‌ப்ப‌டுகிற‌து என்ப‌து அதிரிச்சியாக‌ இருக்கிற‌து.


பிர‌ச்ச‌னைக‌ளுக்க்கான‌ தீர்வு "ஆளை தூக்கற‌துதான்" என்ப‌தாக‌ போன‌து எவ்வ‌ள‌வு வேத‌னை.?

க‌ள்ள‌ காத‌லா? பெண்ணை கொல்லு. இல்லையே அந்த‌ பெண் க‌ள்ள‌ காத‌ல‌னுட‌ன் சேர்ந்து க‌ண‌வ‌னை கொல‌வாள்.

ப‌ண‌ம் கேளு. கொடுக்காவிட்டால் ஆளை கொல்லு.

கொள்ளை அடி. அத‌ற்கு முன்பு சாட்சியாக‌ யாரையும் விட்டு வைக்காதே.
(இந்த‌ மாதிரி கொள்ளைய‌டிக்கும் முன்பு அந்த‌ வீட்டில் இருக்கும் அனைவ‌ரையும் போட்டுத் த‌ள்ளு முறை உத்திர‌ பிர‌தேச‌ ம‌ற்றும் ம‌த்திய‌ பிர‌தேச‌த்தை சேர்ந்த‌ ஒரு இன‌த்த‌வ‌ருக்கு வ‌ழி முறையாக‌வே கொள்ள‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ விஷ்ய‌ம‌ 1980க‌ளில் டெல்லியில் பெரும‌ள‌வு கொள்ளைக்காக‌ கொலை ந‌ட‌ந்த‌ போது விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. ப‌ல‌ கொலைக‌ளில் இந்த‌ விஷ்ய‌ம் உண்மை என்றே நிருப்பிக்க‌வும்ப‌ட்ட‌து. இங்கு ஒரு விஷ‌ய்த்தை க‌வ‌னிக்க‌ வேண்டும். 1980க‌ளிலும் டெல்லி மிக‌ வேக‌மாக ‍‍இன்று சென்னை வ‌ள‌ர்வ‌தைப் போல‌ வ‌ள‌ர்ந்த‌து.)


முன்பெல்லாம் சென்னை வ‌ரும் வ‌ட‌நாட்டின‌ர் யாரைக் கேட்டாலும் ந‌ம் ஊரின் அமைதியையும் மென்மையான‌ ம‌க்க‌ளையே புக‌ழ்வார்க‌ள்.

ந‌ம‌க்கு தெரிந்த‌தெல்லாம் ஜேப்ப‌டி திருட்டு, ஏமாத்தி திருடுவ‌து, போன்ற‌ சில்லைறை விஷ்ய‌ங்க‌ள்தான்.

அப்ப‌டியெல்லாம் இருந்த‌ த‌மிழ‌க‌ம் இன்று இப்ப‌டி மாறிய‌த‌ன் கார‌ண‌ம் என்ன‌?
காவ‌ல்துறை ஊழலில் முழுகி பொது ம‌க்க‌ளை கைவிட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌ ம‌க்க‌ளே நீதி வ‌ழ‌ங்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ரோ? ‍

நீதித்துறை வ‌லுவிழ‌ந்து நீதி வ‌ழ‌ங்க‌ தாம‌த‌மாகி போவ‌தினால் இளைஞ‌ர் ச‌முதாய‌ம் கொலைதான் நியாய‌ம் என்று நினைக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌தோ?

ஊழ‌லில் முழுகிய‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் காவ‌ல் ம‌ற்றும் நீதித்துறையின் அல‌ட்சிய‌த்தால் எதையும் செய்ய‌லாம் என்று தொட‌ங்கி கொலையில் முடிகிற‌தோ.?

வெளிமாநில‌த்த‌வ‌ர் ந‌ம்மிட‌மிருந்து க‌ற்க‌ ஒன்றும் இல்லாம‌ல் போன‌தால் ந‌ம‌க்கு இந்த‌ வ‌ன்முறை தீர்வை க‌ற்றுக் கொடுத்துவிட்ட‌ன‌ரோ?


ந‌ம் ஊட‌க‌ங்க‌ள் கொலை ம‌ற்றும் உயிற் ப‌றிப்பின் வேதனைக‌ளை ம‌றைத்து அவைக‌ளை சாத‌னைக‌ளாக்கிவிட்ட‌ன‌வோ?

கொலைக‌ளை நியாய‌ப்ப‌டுத்தியும் ஊக்குவிப்ப‌தை போல‌வும் ப‌ட‌ம் எடுப்ப‌தையே பெருமையாக‌ச் சொல்லும் ஊட‌க‌வியாள‌ர்க‌ளுக்கு ஒரு கொலையின் பின்னாடி உள்ள‌ சோக‌ம் தெரியுமா?

கொல்ல‌ப்ப‌ட்ட‌வன் குடும்ப‌மும் ந‌டுத்தெருவுக்கு வ‌ருகிற‌து. கொன்ற‌வ‌னின் குடும்ப‌மும் ந‌டுத்தெருவுக்கு வ‌ருகிற‌து.

அது மட்டுமல்ல அப்படி நடத்தெருவுக்கு வரும் குடுமபத்திலிருந்து வரும் இன்னொரு தலைமுறை வன்முறையிலிருந்து பாடம் கற்காமல் "பழிக்குப் பழி" என்று மீண்டும் அதே சகதியில் ஊற காரணம் என்ன?

இதை யார் ப‌திவு செய்வ‌து?

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌னின் குடும்ப‌ சோக‌த்தை கொலை செய்த‌வ‌ர் பார்த்தால் நிச்ச‌ய‌ம் அவ‌ர் அந்த‌ கொலையை செய்த‌திற்கு உண்மையாக‌ வ‌ருந்துவார்.
இன்னொரு முறை க‌த்தியை தூக்க‌ மாட்டார். ஆனால் அதை அவ‌ருக்கு அந்த‌ சோக‌த்தை

யார் எப்ப‌டி உண‌ர்த்துவ‌து?
இதில் ஊட‌க‌ங்க‌ளில் ப‌ங்கு என்ன‌?
ஏன் செய்ய‌வில்லை.?

தொட‌ர்ந்து அறுவா தூக்குப‌வ‌னே ஜெயிப்ப‌தாக‌ காட்டி காட்டி ஒரு இர‌ண்டு த‌லைமுறையை கெடுத்துவிட்டோம். இன்று வ‌ரும் மூன்றாம் த‌லை முறை உண்மையில் இப்ப‌டி வாழ்ந்தால் த‌ப்பில்லை என்று நினைக்கும் அள‌வுக்கு அவ‌ர‌து உண‌ர்வுக‌ள் ம‌ற‌த்துவிட்ட‌ன‌.

பெரும்பாலும் ச‌ரியான‌ க‌ல்வி க‌ற்ற‌வன், குடும்பத்தில் நல்ல முன்னுதாரனம் கண்டவன், இந்த‌ மாயையிலிருந்து த‌ப்பித்து செல்கிறான். அப்ப‌டி கல்வி க‌ற்காத‌வனும் வீட்டில் சரியான முன்னோடி இல்லாதவனுமே இந்த‌ ச‌க‌தியில் மாட்டிக் கொள்கிறான். இது நியாய‌மா?


இது மாற‌வேண்டாமா?

உள‌விய‌ல்ரீதியாக‌ ந‌ம் ச‌முதாய‌த்தில் ஒரு மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டாமா?


நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ "எத‌ற்கெடுத்தாலும் கொலை" என்கிற‌ ம‌னோநிலைக்கு உள‌விய‌ல் ரீதியாக‌ கார‌ண‌ங்க‌ள் இருக்க‌ வேண்டும்.

ஒரு பொறுப்புள்ள‌ ச‌முதாய‌மாக‌ நாம் கார‌ண‌ங்க‌ளை ப‌ல்வேறு த‌ள‌த்தில் தேட‌ வேண்டும்.

வெளி மாநிலத்தவரின் குடியேற்ற‌ம் ப‌ற்றிய‌ என்னுடைய‌ கேள்வி ஒரு சிறிய‌ முய‌ற்ச்சிதான். அது ம‌ட்டுமே நிச்ச‌ய‌மாகன‌ கார‌ண‌ம் அல்ல‌.

வேறு என்ன‌ கார‌ண‌ங்க‌ளாம் நாம் ம‌னித‌ர்க‌ள் என்கிற‌ நிலையிலிருந்து வெகு வேக‌மாக‌ மிருக‌ங்க‌ள் என்கிற‌ நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ப‌தை ஆராய‌த‌ல் வேண்டும்.

மிக‌ அவ‌ச‌ர‌மாக‌ இந்த‌ விஷ்ய‌த்தில் ஒரு ச‌முக‌ விவாத‌ம் வ‌ந்து தெளிவு தேட‌ வேண்டும்

ஆராய‌ ம‌றுப்ப‌து ந‌ம் த‌மிழ் ச‌முதாய‌த்திற்கு ந‌ல்ல‌த‌ல்ல‌.
இது போன்று ஒரு மெத்த‌ன‌ம் அபாய‌க‌ர‌மான‌து.

பின்பு திருத்த‌ முடியாத‌ அள‌வுக்கு த‌மிழ‌க‌த்தின் உண்மையான‌ க‌லாசார (இன்னும் எங்காவ‌து மிச்ச‌ம் இருந்தால்!) முக‌ம் சிதைந்து போகும்.

Saturday, August 07, 2010

திரு. ஜெமோவுக்கு இன்னுமொரு விளக்கம்

எழுத்தாளர் சுஜாதாவை யாரும் விமர்சனமே செய்யக்கூடாதா? என்று சிலர் கேட்கலாம். ஒரு எழுத்தாளரை எப்படி விமர்சிக்கலாம் என்று இன்னொரு
எழுத்தாளருக்கு நாம் சொல்லித் தரவேண்டிய நிலையில் தமிழ் கூறும் நல்லுலகம் இருப்பது மிகவும் கேவலம்.


ஒரு வாசகனாக, விஞ்ஞானியாக (இவருக்கு உண்மையிலேயெ அறிவியல் தெரியும் ஐயா!!) திரு.சுஜாதாவை சில முறை சந்தித்தவராக, திரு.சுஜாதாவிற்கு சில அறிவியல் விஷ்யங்களை தெளிவு படுத்தியவராக (அடிக்கோடிட வேண்டிய செய்தி!) இருக்கும் திரு. வெங்கட் என்பவர் திரு.சுஜாதா இறந்தவுடன் எழுதிய இரங்கல் செய்தியில் எழுதியிருப்பதை கீழ் காணுங்கள்..திரு.ஜெமோவுக்கு பண்புடன் எப்படி எழுதுவது என்பது பழக்கப்படும்.

""சற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.

ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.

என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் உருவகித்துக் கொண்டு ஸ்டெப் கட்டிங், சாக்பீஸைத் தூக்கிப்போட்டு வாயால் பிடித்தல் என்று தங்களுக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் எனக்காக நான் வரித்துக் கொண்ட தோற்றம் வஸந்த். அது “மோபெட்டில் ஏறி ஆக்ஸ்லரேட்ட எட்டு நொடிக்குள் அறுபது” என்று செயலில் துரிதம் காட்டுவதிலும், அடுத்தத் தெரு உஷாவிடம் அபத்த ஜோக் சொல்லவும், மதியம் தூங்கி எழுந்தவுடன் பேச்சு குளறும் பாட்டிக்கு வந்திருப்பது மயஸ்தேனியா க்ராவிஸ் என்று வாயில் நுழையாத பெயரைச் சொல்லி மாமாவைப் பயமுறுத்தவும், நீண்ட நேரமாக கட்டைப் போட்டு ஓவர்களை வீணடிக்கும் பீக்காசுவை ‘ஹேபியஸ் கார்பஸில்’ வெளியே அழைக்கிறேன் என்று எதிர் காப்டனிடம் சொல்லவும், செஸ்ஸில் தோற்றுப் போன வக்கீல் மாமாவிடம் ரை லோபெஸ் ஒப்பனிங்க்கு நைட்டை வெட்டுக்கொடுத்ததுதான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று அவர் முகத்தில் பேஸ்த் அடிக்கச் சொல்லிவிட்டு நகர்வதற்கும் இன்னும் இத்யாதி மூளை, ஆண்மை, இளமை சமாச்சாரங்களுக்கும் நம்மிடம் இருக்கும் வஸந்த்-தனம்தான் காரணம் என்ற பதின்மக் கதாநாயகக் கனவுகளுக்குப் பேருதவியாக இருந்தது.
வானொலி மாமா சோதனைகள் என்று குழந்தைத்தனமாகவும், பொழுதுபோக்கு பௌதீகம் என்று வறட்சியாகவும் வாசித்துக் கொண்டிருந்த தமிழில் சிலிக்கன் சில்லுப் புரட்சியைக் கொண்டு வந்தவர் சுஜாதா. ஸ்பான், ஸ்பூட்னிக், கூரியர், சயண்டிபிக் அமெரிக்கன், நேஷனல் ஜியாகரபிக் சமாச்சாரங்களை ‘சுடச்சுட” அந்தக் காலங்களில் தமிழுக்குக் கொண்டுவந்தவர். என்னுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்ததில் அவருக்கும் கொஞ்சம் பங்குண்டு. நான் பத்தாம் வகுப்பு முடித்து +2 செல்லும்பொழுது மிகச் சூடாக இருந்தது “காமெர்ஸ் க்ரூப்” படிப்பு (எக்கனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்ஸி, கணக்கு) என்னுடன் படித்த சகாக்கள் எல்லோரும் சிஏ-ஆவதைக் கனவாகக் கொண்டு வர்த்தகப்படிப்பில் நுழைந்த பொழுது இயல்பியலிலும், பொறியியலிலும் சுஜாதா (யா.பெர்ல்மான், ரைட்னிக், ஈறாக) கட்டுரைகள் என்னை வர்த்தக வழிசெல்லாமல் தடுத்தாட்கொண்டு அறிவியலுக்கு வரவழைத்தது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணினி வருகிறது என்று சுஜாதா எழுதும்பொழுதுதான் காகிதங்கள் வாயிலாக மாத்திரமே அறிந்திருந்த ஒன்றிலிருந்து நாம் நீண்ட காலம் தப்பமுடியாது எனவே இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று படிக்கும் ஆர்வம் வந்தது.

பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் பல தமிழ் மன்ற ஆண்டு விழாக்களுக்கு சுஜாதாதான் ஆஸ்தான தலைவர்). ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது சிலமுறைகள் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகளில் அவரது கூர்மையான அவதானிப்பை நேரடியாக அறியமுடிந்தது. முதல் தடவை ஒரு சாவகாசமான சனிக்கிழமை காலை, இரண்டு மணி நேர இலக்கில்லா அரட்டைக்கு இடையில் மழைவிட்டிருந்த பொழுது காப்பி குடிக்கச் சென்றோம். ஓய்ந்த மழைக்குப்பின் ஐஐஎஸ்ஸின் சாலைகள் கழுவிவிடப்பட்டதுபோல் கருப்பாக, பளபளப்பாக மிகக் கவர்சியாக. சாலையின் இரு ஓரங்களிலும் கரையிட்டதுபோல் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தப் பூக்களைப் பற்றிய பேச்சு வந்தது. இது என்ன பூ என்றார். நான் சரக்கொன்றை என்றேன். இதுக்கு இங்கிலீஷ்ல என்ன பேர் தெரியுமா என்று கேட்டார்? அவர் அறிந்திருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் இண்டியன் லேபர்னம் என்று சொன்னார். இந்தச் சந்திப்புக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கல்கியில் ஒரு புதிய தொடரை ஆரம்பித்தார் (தலைப்பு நினைவில் இல்லை, அது ஒரு பெங்காலி பேராசிரியரையும் அவரது இளம் மாணவியையும் பற்றிய கதை). அந்தக் கதையே இப்படித்தஅன் துவங்கும் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் இன்னதேதியில் சொல்லிவைத்தால்ப்போல் பெங்களூர் சாலையோரமெங்கும் மஞ்சள் பூக்கள் பூக்கட்டும்” எங்களுக்கும் சுஜாதாவுக்கும் நடந்த அதே இண்டியன் லேபர்னம் உரையாடல் எந்த மாற்றமுமில்லாமல் அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் கதையில் நடந்தது.

இரண்டாம் முறை இன்னும் சுவாரசியமானது. அப்பொழுது விகடனில் ‘நிலா நிழல்’ ‘என் இனிய இயந்திரா’ தொடர் மிகப் பிரபலமாக நடந்துகொண்டிருந்தது. அதில் ஸ்டார் வார்ஸைப்போல லேசர் ஆயுதமெல்லாம் வரும். ஒரு இடத்தில் லேசர் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தப்படும்பொழுத்து ஜீனோ என்ற இயந்திர நாய் நிதானமாக உன்னிடம் இருக்கும் லேசரின் பவர் அதன் கொகரென்ஸில் இருக்கிறது, நான் அதைப் போக்கி உன் துப்பாக்கியை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று சொல்லும். அந்த சந்திப்பின் பொழுது எங்கள் ஆய்வகத்திலிருந்த லேசர்களை அவருக்கு இயக்கிக் காட்டிக்கொண்டிருந்தோம். (அந்தத் தொடருக்காகவே எங்கள் லாப்-க்கு வந்தாரோ என்று தோன்றுகிறது). அப்பொழுது coherence என்பது லேசரின் அடிப்படைப் பண்பு என்றும் அதை அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது என்றும் அவரிடம் சொன்னோம். தொடர்ந்து அப்பொழுது இந்திய இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திற்காக நான் செய்துகொண்டிருந்த Optical Phase Conjugation என்ற சோதனையை அவருக்கு விவரித்தேன். அதன் முக்கியமான இலக்கு ஒரு auto-tracking ஆடி போன்ற அமைப்பை உருவாக்குவது. இது ரொனால்ட் ரீகனின் ஸ்டார் வார்ஸ் ப்ரொக்ராம்க்குப் (Strategic Defense Initiative) பதில் சொல்ல வேண்டி இந்தியாவின் முயற்சிகளில் ஒன்று. வானில் பறக்கும் விமானத்திலிருந்து ஏவப்படும் லேசரை அதனிடமே திருப்பியனுப்பும் உத்தி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுத்த வாரம் கதையில் ஜீனோவின் decoherence எல்லாம் பம்மாத்து சும்மா சுடு என்று சக காவலனிடம் ஒருவன் சொல்ல, அவன் சுட ஜீனோ phase conjugate mirror ஐப் பயன்படுத்தி அவனிடமே லேசரைத் திருப்பியனுப்பி அழிக்கும். நான் பழகிய மனிதர்களில் இத்தனைக் கூர்மையான அவதானம் கொண்டவர்கள், அந்த அவதானத்தை சுவரசியாமான உரைநடையாக்கம் செய்யும் திறன் கொண்டவர்கள் மிகச் சிலரே.

சுஜாதாவின் முதல் திரைப்பிரவேசம் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் என்று தொடர்ச்சியாக அவர் கதைகள் திரைச்சேதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இரண்டாம் வருகையில் அவருக்கு மாபெரும் வெற்றி ரோஜா, முதல்வன், இந்தியன், அந்நியன், ஆய்த எழுத்து, சிவாஜி என்று அவர் பங்களித்த படங்களில் பல மாபெரும் வெற்றியைப் பெற்றவை. எழுத்துக்கும் திரைக்கும் இடையில் சப்தமில்லாமல் சில நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதினார். பூர்ணம் விஸ்வநாதன் உதவியுடன் அபத்தத் துணுக்குத் தோரணங்களிடமிருந்து மேடை நாடகங்களை மீட்டெடுக்கும் முயற்சி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும்கூட என்னைப் பொருத்தவரை அவர் ஆத்மார்த்தமாகச் செய்த ஒரே காரியம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

பலரும் எழுத்துத் துறையில் சுஜாதா அசாத்திய சாதனைகளைச் செய்து முடித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் எழுதுபதுகளில் கட்டியம் கூறிய வருகை நிறைவேறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் வர்த்தக ரீதியான அவரது அசாத்திய சாதனைகள். அலுங்காமல் போகிற போக்கில் எழுதுபவை பெருவெற்றியைப் பெறுவதும் ஒன்றிரண்டு உண்மை முயற்சிகள் தோல்வியைத் தருவதும் அவரது எழுத்தின் போக்கை முழுமையாக நிர்ணயித்துவிட்டன. அதன் காரணமாகவே அவர் எந்த ஆழமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாவற்றிலும் தகவல் தெரிய ஒரு சுஜாதா போதும் ஆனால் எவற்றிலும் முழுமையான புரிதலை அவர் தந்ததில்லை. பெயர் உதிர்த்தல், ஜல்லியடி போன்று அவர் பிரபலமாக்கிய சில வார்த்தைகள் அவருக்கே முழுமையாகப் பொருந்திப்போவது வருத்தமான விஷயம்.

வேலைக்கிடையில் எந்தவிதமான ஆழமான முயற்சிகளுக்கும் இடமில்லாத நிலையில் பெங்களூரில் இருந்தவரை அவரால் அதுதான் சாத்தியம் என்று தோன்றியது. ஓய்வுக்குப் பின் அவர் மாபெரும் படைப்புகளை உருவாக்கப் போகிறார் என்றிருந்தது. வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது.

So long, Sujatha! Thanks for everything.""


நன்றி திரு.வெங்கட் அவர்களே!

http://domesticatedonion.net/tamil/2008/02/27/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/


இந்த‌ வ‌லைப்பூவில் இந்த‌ க‌ட்டுரைக்கு யார் யார் எப்ப‌டி விரிவாக‌ நாக‌ரீக‌மாக‌ பின்னூட்ட‌மிட்டிருக்கின்ற‌ன‌ர் என்ப‌தை ப‌டிப்ப‌த‌ற்கே அந்த‌ வ‌லைப்பூன் தொட‌ர்பினை இங்கு ப‌திக்கிறேன்


இந்த‌ ந‌ண்ப‌ரின் செய்திக‌ளில் நம்மில் பலருக்கு முழுவ‌தும் உட‌ன்பாடில்லாம‌ல் போக‌லாம். ஆனால் அவ‌ர் த‌மது க‌ருத்தை எடுத்துவைத்த‌ வித‌ம் மிக‌வும்
நாக‌ரீக‌மான‌து. த‌ம்மை எது பாதித்த‌து. தாம் எதை எதிர்பார்த்து அது ந‌ட‌க்காம‌ல் போயிற்று என்று மிக‌ மிக‌ அழ‌காக‌ எழுதியிருக்கும் இவ‌ர் பாராட்டுகுரிய‌வ‌ர்.

ஜெமோ இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளிட‌மிருந்து க‌ற்க‌ வேண்டிய‌து நிறைய‌ இருக்கிற‌து

Friday, August 06, 2010

"ஜெமோ"



"ஜெமோ"

இந்த மனிதர் தாம் ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்று கூறிக் கொள்கிறார்.

ஒரு தனிமனித நாகரீகம் அறியாத இவர் எப்படி ஒரு இலக்கியவாதியாக இருக்க முடியும். அப்படியென்றால் இலக்கியவாதிக்கு தனிமனித நாகரீகம் வேண்டாமா?

இந்த "சுய விளம்பர வியாதி",யாரை இப்போது தூற்றத் தொடங்கியிருக்கிறார் தெரியுமா?

மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதாவை!

இந்த "ம்மா.மனிதரால்" பாமரர்கள் என்று அழைக்கப்படும் நம் போன்றவர்களின் பெரும் அன்பைப் பெற்ற திரு. சுஜாதாவை இந்த மனிதர் தனிப்பட்ட முறையில் தாக்கத் தொடங்கியது இலக்கியம் என்றால் நான் இங்கிலாந்தின் மன்னன்.

இவ‌ரைப் ப‌ற்றி நான் கேள்விப் ப‌ட்ட‌துண்டு. இவரது கதைகளையும் கட்டுரைகளையும் படித்துப் பார்க்க முயற்ச்சித்து தோற்றதுண்டு. புரிவதற்குள் பொழுது விடிஞ்சுடுங்க. பத்து வரிக்குள் போரடித்துவிடும். அசாத்திய பொறுமை வேண்டும். வாணம்னு விட்டுட்டேன்.

இவ‌ரை "சைக்கோ" என்று ந‌ம்ம‌ க‌னிமொழி அம்மா பேசிய‌ கூட்ட‌த்தில் வ‌ரைய‌ரைக்க‌ப் ப‌ட்ட‌ போது கொஞ்ச‌ம் யோசித்த‌துண்டு. ஆனா, இவ‌ர் அப்ப‌டித்தானோ என்று இப்போது நினைக்க‌த் தோன்றுகிற‌து.

சுஜாதாவை இவ‌ர் ப‌ல‌ வித‌ங்க‌ளில் பொறாமை கொண்டு தாக்குகிறார்.

இவ‌ரது கூற்றுப் ப‌டி சுஜாதா அறிவிய‌ல் விஷ‌ய‌மாக‌ எழுதிய‌ அனைத்தும் குப்பை காரணம் அவை மேலெழுந்த‌ வாரியாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ குற்ற‌ச்சாட்டில் உண்மை உண்டா?

இல்லை. கார‌ண‌ம். சுஜாதா தாம் எழுதிய‌ அனைத்தும் ஒரு சுட்டி அல்ல‌து தொட‌க்க‌ம் என்றே கூறுகிறார்.இந்த‌ தொட‌க்கத்திலிருந்து நீங்க‌ள் தேட‌த்தொட‌ங்குங்க‌ள் என்றே உங்க‌ளை அழைக்கிறார். டி.என்.ஏ.வைப் ப‌ற்றி அவ‌ர் ஒரு சிறிய‌ வெளிச்ச‌ம் ம‌ட்டுமே காட்டிய‌தாக‌க் கூறுகிறார்.

சுஜாதா ஒரு சாலை விள‌க்கு போல‌ அல்ல‌து ஒரு சாலை வ‌ழிகாட்டி போல‌ செய‌ல்ப‌ட்டார். அதை அவ‌ர் சுவார‌சிய‌மாக‌ ந‌ல்ல‌ சுவையுட‌ன் தேர்ந்த‌ நையாண்டியுட‌ன் செய்தார். இது ந‌ம்ம‌ ஜெமோவுக்கு சுத்த‌மா வ‌ராது.

எந்த‌ ஒரு சாலை வ‌ழிகாட்டியும் உங்க‌ளை ஊர் போய் சேர்க்காது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜெமோ என்ன‌ சொல்கிறார் என்றால் சுஜாதா உங்க‌ளை உங்க‌ளின் வீட்டின் வாச‌ல் வ‌ரைக் கொண்டு செல்ல‌வில்லை என்று கோப‌ப் ப‌டுகிறார்.

திரு. ஜெமோ சுஜாதாவை குறை சொல்லி அவ‌ர‌து புக‌ழை ப‌ங்க‌ப் ப‌டுத்தி த‌ன்னை உய‌ர்த்திக் கொள்ள‌ முடியாது. சொந்த‌மா எதாவ‌து சுவார‌சிய‌மா எழுதி புக‌ழ‌டைந்தால்தான் உண்டு.

ஜெமோவின் பார்வை ஏற‌க்குறைய‌ இந்திய‌ க‌ல்வித் திட்ட‌த்தின் கீழ் வ‌ரும் ப‌ழைய‌ ஆசிரிய‌ர்க‌ளின் (பெரும்பாலும்!) எண்ண‌ங்க‌ள் போல‌வே உள்ள‌து.

அதாவ‌து நான் ஆசிரிய‌ன். நீ மாண‌வ‌ன்.

என‌க்கு எல்லாம் தெரியும். உன‌க்கு எதுவுமே தெரியாது.

நீ முட்டாள். நான் உன்னை புத்திசாலியாக்கிக் காட்டுவேன்.

கேள்வி கேட்காம‌ல் நான் சொல்வ‌தை ம‌ட்டும் கேள். நீ உய்விக்க‌ப் ப‌டுவாய்.

நான் உன‌க்கு எல்லாவ‌ற்றையும் சொல்லிக் கொடுக்கிறேன்.

இப்ப‌டிச் செய்யாத‌வ‌ன் ந‌ல்ல‌ ஆசிரிய‌ன் அல்ல‌.

இதுதான் ஜெமோவின் பார்வை.

ஆனால் உண்மை இதுவா?

இல்லை!..இல்லை!..இல்ல‌வேயில்லை.


எந்த‌ ஆசிரிய‌ரும் ஒரு மாண‌வ‌னின் ஒட்டு மொத்த‌ அறிவிற்கும் கார‌ண‌மாகிவிட‌ மாட்டார்க‌ள்.

ஒரு மாண‌வ‌ர் ஒரு ஆசிரிய‌ரிட‌ம் வ‌ரும் போது தாம் எந்த‌ திசையில் ப‌ய‌ணிக்க‌லாம் என்கிற‌ அறிமுக‌ம் ம‌ட்டுமே அவ‌னுக்கு தேவைப் ப‌டுகிற‌து.

அத‌ற்கு மேல் அந்த‌ மாண‌வ‌ன் தாமேதாம் ப‌ய‌ணிக்க‌ வேண்டும்.

மாண‌வ‌ரும் ஆசிரிய‌ரும் க‌ல‌ந்துரையாடி அறிவை ப‌கிர்த‌லில்தான் ஒரு மாண‌வ‌ன் மேம்ப‌டுகிறான். ஆசிரிய‌ரும் மேம்ப‌டுகிறார்.

வெறும் போதித்த‌ல் ம‌ட்டும் க‌ற்பித்த‌ல் ஆகாது. ஆனால் இன்று ஜெமோ போன்றவ‌ர்க‌ளால் அதுதான் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகிற‌து.

சுஜாதா இதிலிருந்து மாறுப‌ட்டார். அவ‌ர் சுவார‌சிய‌மாக தமக்கு அறிமுகமான ஒவ்வொரு விஷ‌ய‌த்தையும் த‌ம் வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்தினார். த‌ம‌க்கு தெரிந்த‌ அனைத்தையும் அவ‌ர் வாந்தி எடுப்ப‌தைப் போன்று கொட்டி ப‌டிப்ப‌வ‌ர்க‌ளை ஆயாச‌ப்ப‌டுத்த‌வில்லை.

வெறும் அறிமுகம் அம்புடுதேன். மேலெ தெரிந்து கொள்ள வேண்டுவோர் தாமே அந்தந்த துறை சம்பந்தப்பட்ட நூல்களைத் தேடி தெரிந்து கொள்வார்கள் என்று நம்பினார்.

அவர் என்றும் தம் வாசகர்களை முட்டாள்கள் என்று கருதியாது கிடையாது. சொந்தமாக யோசிக்க மாட்டார்கள் என்று நினைத்தது கிடையாது.

அத‌னால்தான் அவ‌ர் ல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ வாச‌க‌ர்க‌ளால் ஆராதிக்க‌ப்ப‌ட்டார்.


அடுத்து இவ‌ர் திரு. சுஜாதாவை த‌னிப் ப‌ட்ட‌ முறையில் தாக்குகிறார். அதாவ‌து திரு. சுஜாதா த‌னிப்ப‌ட்ட‌ முறையில் சிடுமூஞ்சியாம். மேலும் அவ‌ர்
பொழுது போகாம‌ல் க‌ணினியில் "சின்ன‌ ப‌ச‌ங்க‌ விஷ்ய‌ம்" பார்த்துக் கொண்டிருந்தாராம்.

இதெல்லாம் ப‌டிக்கும் போதுதான் இவ‌ர் ஒரு "சைக்கோ" என்று ப‌ல‌ர் கூறுவ‌தில் அர்த்த‌ம் உள்ள‌தோ என்று நினைக்க‌த் தோன்றுகிற‌து.

திரு. சுஜாதாவை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ச‌ந்தித்த‌வ‌ர்க‌ள் இதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள‌ மாட்டார்க‌ள். அவ‌ரை நான் எந்த‌ வித‌ அறிமுக‌மும் இன்றி ச‌ந்தித்திருக்கிறேன். சாதார‌ண‌ வாச‌க‌னாக‌ ஒரு தெரு முனையில் இருவ‌ரும் சிக‌ரெட் வாங்கும் போது (டெல்லியில்!)பார்த்து ஒரு அரைம‌ணி நேர‌ம் பேசிக் கொண்டிருந்தேன். என‌க்கு அவ‌ர் சிடுமூஞ்சியாக‌த் தெரிய‌வில்லை.மிக‌வும் உற்ச்சாக‌மாக‌ பேசினார்.

மேலும் ஒரு "சிடுமூஞ்சி" எப்ப‌டித் த‌ன்னைச் சுற்றி அல்ல‌து த‌ன‌க்கு நெருக்க‌மாக‌ இவ்வ‌ள‌வு பெரிய‌ ந‌ட்பு வ‌ட்ட‌த்தை உருவாக்கிக் கொள்ள‌ முடியும் என்கிற‌ அடிப்ப‌டை கேள்வி கூட‌ கேட்க‌த் தெரியாத‌வ‌ன் இந்த‌ த‌மிழ் வாச‌க‌ன் என்று ஜெமோ ந‌ம்புகிறார். ஜெமோவின் ந‌ட்பு வ‌ட்ட‌ம்தான் நாட‌றிந்த‌ ஒன்றாயிற்றே!.. இவ‌ருக்கு ந‌ண்ப‌ர்க‌ளை விட‌ எதிரிக‌ள் அதிக‌ம்.

சாதார‌ண‌மாக‌ ஒரு ம‌னித‌னுக்கு அடிப்ப‌டையாக‌ ந‌கைச்சுவை உண‌ர்வு இல்லையேல் அவ‌ர் நிச்ச‌ய‌மாக‌ ந‌கைச்சுவையுட‌ன் கூடிய‌ ப‌டைப்புக‌ளை தொடர்ந்து, பலராலும் பாராட்டும் வகையில் ப‌டைக்க‌ முடியாது என்ப‌து உண்மை. ஒவ்வொரு எழுத்தாளரும் நிச்ச‌ய‌மாக‌ தாம் ஆழ்ம‌னதில் அதிக‌மாக‌ ந‌ம்புவ‌தை,ர‌சிப்ப‌தை, அஞ்சுவ‌தை, வெறுப்ப‌தை, எதிர்பார்ப்பதை, எதிர்ப்பதை, போன்றவற்றையே எழுத்தில் கொண்டு வர முயற்ச்சிக்கிறார்கள் என்ப‌து பெரும‌ள‌வுக்கு உண்மை.

த‌ன‌து எண்ண‌ங்க‌ளை இன்னொரு க‌தா பாத்திர‌த்தின் மீது ஏற்றி சொல்வ‌து வ‌ழ‌க்க‌மான‌ விஷ்ய‌ம்தான்.

அப்ப‌டி பார்க்கும் போது ஜெமோவின் ம‌ன‌தில் என்ன‌ உள்ள‌து என்ப‌து அவ‌ர‌து எழுத்தில் தெரிகிற‌து என்று கொள்வோம்.

ஏற்க‌ன‌வே சுஜாதாவுக்குப் பிற‌கு எல்லோரும் என் எழுத்தைத் தான் ப‌டிக்கிறார்க‌ள் என்று சொல்லிக்கிட்டு அலைய‌ற‌வ‌ங்க‌ நிறைய‌ பேர் இருக்காங்க‌.

அது கூட‌ ப‌ர‌வாயில்லை என்று இப்போது தோன்றுகிற‌து.

கார‌ண‌ம். ஜெமோ போன்ற‌வ‌ர்க‌ள் சுஜாதாவைப் ப‌ற்றி பொய்யுரைத்தால் த‌ன‌க்கு வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் கூடும் என்ற‌ நினைப்பு முந்தைய‌தைவிட‌ கேவ‌ல‌மாக‌ இருக்கிற‌து.

இவர் சுஜாதாவிற்கு கீதையின் சாராம்சத்தை விளக்கினாராம்.

அடா..அடா..இவர் கதா காலட்சேபம் வேறு செய்வார் போலிருக்கு.

சுஜாதா நிருபண வாததிற்கும் காலம் காலமாக வந்த நம்பிக்கைக்கும் உண்டான மோதலின் இடையில் சங்கடப்பட்டார் என்று சொல்கிறார்.
இது பொய்.

நிருபண வாதத்திற்கும் நம்பிக்கை மற்றும் நிகழ்வுக்கும் உண்டான மோதலை அவர் உணர்ந்திருந்தார் என்கிற அளவோடு இது சரி. அவர் அதனால் சங்கடப்பட்டார் என்பது திரித்துச் சொல்வது. காலம் காலமாக எல்லா அறிஞர்களும் செய்த தேடலைத்தான் அவரும் செய்தார்.

ஒரு முறை கேள்வி பதிலில் ஒரு வாசகர் "விஞ்ஞான தேடல் என்று முற்றுப் பெறும்" என்று கேட்ட போது " விஞ்ஞானத் தேடல் பிறப்பின் ரகசியம் அறியும் போது முற்றுப் பெறும்" என்று ஒரு ஒற்றை வரியில் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இது தடுமாற்றமா? தேடலா?

சுஜாதா ஜெமோ வைப்போல எழுத முயற்ச்சித்து தோற்றுப் போனராம். அதையும் இவரிடமே சொன்னாராம்.என்ன ஒரு அவதூறு?சுஜாதா இனி வரமாட்டார் என்கிற நம்பிக்கையில் எப்படியெல்லாம் அவதூறு செய்கின்றனர்?

இதை சுஜாதா "ஸ்டைலில்" எடுத்துக் கொள்வோம். அதாவது இது சுஜாதா ஜெமோவை கிண்டல் செய்திருப்பார். அதாவது "உன்னைப் போல (மோசமான) ஒரு கட்டுரை எழுதனும்னு முயற்ச்சி பண்றேன். முடியல"..இந்த சுய விளம்பர பிரியரும் அதை உண்மை என்று நம்பி உளறிக் கொட்டுகிறது.


சுஜாதா டை அடிக்கிறார். இள‌மையாக‌ தெரிகின்றார்..(ஏன் வயத்தெரியுதா!) டீ குடிக்கிறார்.வீட்டில் இருக்கும் போது அவர் எப்படி இருந்தார்?
இப்ப‌டியெல்லாம் ஜெமோ ஏன் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் விம‌ர‌சிக்க‌ வேண்டும்?

இந்த‌ ஆள் உண்மையின் வெளிச்ச‌த்தைக் க‌ண்டு அஞ்சுகிறார்.


திரு. சுஜாதாவின் உய‌ர‌ம் மிக‌வும் அதிக‌ம்.
அவ‌ர‌து வாச‌க‌ர்க‌ளின் உய‌ர‌மும் அதிக‌ம்.
சுஜாதாவை ர‌சித்த‌வ‌ர்க‌ள் இது போன்று சின்ன‌புள்ள‌த் த‌ன‌மால்லாம் யோசிக்க‌வில்லை.

அவ‌ர‌து எழுத்தை ர‌சித்த‌வ‌ர்க‌ள் அவ‌ர் அன்று காலையில் என்ன‌ சாப்பிட்டார் அல்ல‌து அன்று அவ‌ர் க‌ழிவ‌றையில் முக்கினாரா என்றெல்லாம் யோசிக்க‌ வில்லை.

அப்ப‌டிப்ப‌ட்ட‌ வாசகர்க‌ளை அந்த‌ பெரிய‌ ம‌னித‌ர் வ‌ள‌ர்க்க‌வில்லை என்ப‌தே அவ‌ருக்குப் பெருமை.

திரு. ஜெமோவின் இந்த‌ "அடுத்த‌வ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ளை" ஆய்வு செய்யும் முறை அதிர்ச்சி அளிக்கிற‌து.

இவ‌ர் ம‌ன‌த‌ள‌வில் குறையுள்ள‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாத‌ ஒரு திட்ட‌மிட்டு தாக்கும் குற்ற‌வாளியாக‌வும் தென்ப‌டுகிறார். (Attack with a criminal motive!)

எழுத்தை விம‌ர்ச‌ன‌ம் செய்கிறேன் என்கிற‌ போர்வையில் இப்ப‌டி த‌ர‌ம் தாழ்ந்து, அதுவும் நிருபிக்க‌ முடியாத விஷயங்களை, எழுந்து வ‌ந்து ம‌றுப்ப‌ளிக்க‌ முடியாத இட‌த்தில் இருக்கிறார் என்ற‌ எண‌ண‌த்தில் க‌ட்டுக்க‌தைக‌ளையும் க‌ற்ப‌னைக‌ளையும் வெளியிடுவது இவ‌ர‌து வ‌க்கிர‌ ம‌ன‌த்தையே வெளிக்காட்டுகிற‌து.

சுஜாதா எழுத்துல‌கில், சினிமா உல‌கில் ம‌ற்றும் ச‌முக‌ வாழ்க்கை விஷ்ய‌த்தில்
இந்த‌ ஜெமோ போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ முடியாத‌ உச்ச‌த்தில் இருந்தார் என்ப‌து
இனி நிருபிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌தில்லை.

உண்மையில் ஜெமோதான் தான் அந்த‌ உய‌ர‌த்தை நினைத்து பார்க்க‌க்கூட‌ த‌குதியுடைவ‌ர்தானா என்ப‌தை நிருபிக்க‌ வேண்டிய‌ நிலையிலுள்ளார்.

ஒன்றை ஜெமோ நினைவில் கொள்ள‌ வேண்டும்.
வெறுப்பு என்ப‌து ஒரு தவிற்க்க வேண்டிய மனோ நிலை.
அதை மனிதில் வைத்திருந்தால் வைத்திருப்பவரின் எண்ணம் எழுத்து, செயல் பார்வை உருவம் என்று எல்லாவற்றையும் பாதிக்கும். அழிவைத்தேடி இட்டுச் செல்லும்

சுஜாதா யாரையும் எத‌ற்காக‌வும் த‌னி ம‌னித‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் செய்த‌தில்லை.
இன்னும் சொல்ல‌ப் போனால் அவ‌ர் ச‌க‌ த‌மிழ் எழுத்தாள‌ர்க‌ளை குறை கூறி யாரும் கேட்ட‌றியார்.


ச‌க‌ எழுத்தாள‌ர்க‌ளை எடை போடும் வேலை வாச‌க‌ர்க‌ளுடைய‌து என்ப‌து அவ‌ர்
உண‌ர்ந்திருந்தார். அந்த வேலையை அவர் ஒரு போதும் செய்ததில்லை.

"உன் எழுத்துக்க‌ள் ச‌ரியாக‌ இருந்தால் நீ ம‌திக்க‌ப்ப‌டுவாய். இல்லையேல் ஒதுக்க‌ப்ப‌டுவாய்" என்ப‌தில் அவ‌ர் தெளிவாக‌ இருந்தார்.

இந்த‌ ஜெமோவின் நோக்க‌த்தை (In English "Criminal Intent") பார்க்க‌ ப‌ய‌மாக‌ இருக்கிற‌து. இவரின் இந்த குணங்கள் இப்போது தோன்றியிருக்க வாய்ப்பில்லை. இது தேர்ந்த, கடைந்தெடுத்த, அயோக்கியத்தனமான, நய வஞ்சகத்தில் ஊறிய, நரித்தனமான, மிகவும் வளர்ந்த விஷ விருட்சம் போன்றதாகப் படுகிறது. (இதற்கு மேல் போட வன்மையான வார்த்தைகள் எமக்கு தோன்றவில்லை)

ம‌றைந்த‌ அந்த‌ மிக‌ப் பெரும் எழுத்தாள‌ரின் குடும்ப‌த்தார் இவ‌ர் வெளியிட்ட‌ குப்பைக‌ளால் ம‌ன‌ம் வெதும்பியிருக்க‌ வாய்ப்புண்டு. ஆனாலும் மேன் ம‌க்க‌ள் மேன் ம‌க்க‌ளே என்ப‌து போல‌ அவ‌ர்க‌ள் இதை புற‌ந்த‌ள்ளி செல்வ‌ர்.

ஒரு முறை சுஜாதிவிட‌ம் இந்த‌ சிறு ப‌த்திரிக்கை எழுத்தாள‌ர்க‌ளின் அடித‌டி ச‌ண்டைகளைப் (இன்னும் அடிச்சுகிற‌ங்க‌ப்பு!) ப‌ற்றி கேட்ட‌ போது..அவ‌ர் அதை அவ‌ர‌து ந‌டையிலேயே..."வெறும் குழாய‌டி ச‌ண்டை..நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை" என்றே கூறி வில‌கினார்.

ந‌ல்ல‌ ம‌னித‌ர் துஷ்ட‌ரை க‌ண்டால் தூர‌த்தான் வில‌குவ‌ர்.

இந்த சாரு நிவேதிதாக் கூட கோபத்தில் ஏதாவது ஏடாகூடமா எழுதுவாரு..பேசுவாரு. ஆனா அவர்கூட இது போன்று பொய்யுரைத்து வஞ்சிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

இன்னும் நிறைய எழுதத் தோணுகிறது. ஆனாலும் தொடர்ந்து ஒரு கோபத்திலேயெ என் மனநிலை இருப்பதை நானே விரும்பவில்லை. ஆக நான் இதைப்பற்றி இன்னும் சிந்தித்து எழுதி நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.


ஜெமோ இதுவ‌ரை எழுதிய‌தோ அல்ல‌து இனி எழுத‌ப்போவ‌தோ முக்கிய‌ம‌ல்ல‌. அவ‌ர் முத‌லில் ஒரு நேர்மையான‌ ம‌னித‌னாக மாறுவதற்கு முய‌ல‌ட்டும். அதுவே அவ‌ர் இந்த‌ ச‌முதாய‌த்திற்கு செய்த‌ பெரும் பேறாக‌ இருக்கும்