Tuesday, October 24, 2006

ஜோஸ்யம்...!!!!

ஜோஸ்யம்.

இதுகூட கடவுள்போலத்தான் இருக்கிறது.

காரணம்..

கடவுளைப்போல இதையும் நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் மற்றும் நம்பி நம்பாதவர்கள் (காரியம் நடக்கவில்லையென்றால் நம்பாதவர்கள்) மற்றும் நம்பாமல் பின் நம்புகிறவர்கள் (ஜோஸ்யர் சொன்னது நடந்ததனால்) இப்படி பலர் உள்ளனர்.

நான் நம்புகிறேனா....

நம்புகிறேன் என்றே நினைக்கிறேன்.இந்த சந்தேகத்திற்க்குக் காரணம்..நானும் எல்லோரையும் போல கஷ்டம் வரும் போது எத்தை தின்றால் பித்தம் தெளியுமென்று ஓடுகிறேனே...

மற்ற நேரத்தில் லாஜிக் பேசுகிறேன்.

இன்று இந்த சப்ஜெக்டுக்கு காரணம்..நேற்று WWW.குமுதம்.டாட்காமில் ஒரு ஜோஸ்ய வல்லுனரை ரபி பெர்னாட் பேட்டி கண்டதை கண்டேன்.அவர் பெயர்..திரு.ராஜகோபாலன்.

இந்த பேட்டி மட்டும் என்னை கவர்ந்தற்க்கு காரண்ம்.

சாதாரணமாய் பேட்டி என்றாலே பல ஜோஸ்யர்களிடம் ஒன்று..ஒரு டிபென்சிவு (DEFENSIVE) தற்காத்துக்கொள்ளும் நிலை இருக்கும். பதில்கள் அவ்வாறே வரும்.
அல்லது...

ஒரு போலியான எல்லாம் தெரிந்த நிலை இருக்கும். அவரின் பதில்களில் வாய்ஜாலமே மிஞ்சும். கொஞ்சம் பேசினாலே விபரம் பல்லிளிக்கும்.


ஆனால் இந்த மனிதர் மிகவும் தன்னடக்கத்துடன் ரபியின் எல்லா கேள்விகளையும் சிறப்பாக தெளிவாக எதிர்கொண்டார். தெளிவாக எளிமையாக, நிகழ்கால உதாரணங்களுடன் விளக்கினார்.

எதையெல்லாம் ஜோஸயம் செய்ய முடியாது என்று விளக்கினார்.

I AM IMPRSSED..

நீங்களும் அந்த பேட்டியைப் பாருங்களேன்..

இவரை தொடர்புகொள்ள எண்ணுகிறேன். வேறெத்துக்கு..எல்லாம் எதிர் காலம் பற்றி அறியத்தான்..
நல்லதேயே சொல்வார் என நம்புவோமாக...

No comments: