Friday, August 20, 2010

பயங்கள் நிஜங்கள் ஆகும் அவலம்!

தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் வரவு பற்றி என்னுடைய கவலை கீழ்கண்ட செய்தியினால் மேலும் உறுதிபடுகிறது!

கீழ் கண்ட செய்தி "ரிப்போர்டரில்" வந்தது.



பால்குடியை மறக்காத இரண்டே வயதான பெண் குழந்தையை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியிருக்கிறார்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்.இந்தக் கொடூரம் நிகழ்ந்தது பீகாரில் அல்ல.... தமிழகத்தில்தான்! ‘இனி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது’என்று கலெக்டரிடமும் புகார் கொடுத்திருக்கிறார்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ளது கணேசபுரம் மற்றும் முல்லை நகர். சிட்கோவில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இங்குள்ள வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தங்கியுள்ளனர். இதில் பீகார் மாநிலம்,சபாரியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரா, திரிலோகி மற்றும் விக்ரம் ஆகிய மூன்று பேரும் முல்லை நகரில் ஒரு வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருந்த குடியிருப்பில் இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் காணாமல் அதன் பெற்றோர் அல்லாடித் தேடி யலைந்திருக்கிறார்கள்.

அப்போது தர்மேந்திராவும்,அவன் நண்பர்களும் தங்கியிருந்த வீட்டிற்குள்ளிருந்து வீலென்று குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. பதறித் துடித்த குழந்தையின் தாய் அந்த வீட்டிற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்திருக்கிறார். அங்கே, கதறியபடி அந்தக் குழந்தை கிடந்திருக்கிறது. அதைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தால் அதன் தொடை, காலெல்லாம் ரத்தமும், ரத்தக்காயங்களும் இருந்துள்ளன. அதிர்ந்துபோன குழந்தையின் தாய் அங்கிருந்த தர்மேந்திரா உள்ளிட்ட மூவரிடமும் என்ன நடந்தது என்று கேட்க,அவர்கள் மொழியில் ஏதேதோ உளறியிருக்கின்றனர்.

அதன்பிறகு குழந்தையை மருத்துவரிடம் எடுத்துக்கொண்டு பெற்றோர் ஓட, அவர் அதைப் பரிசோதித்துவிட்டு, ‘யாரோ பாலியல் வன்முறைக்குக் குழந்தையை ஆளக்கியிருக்கிறார்கள்!’என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். பெற்றோரும், அந்தப் பகுதி மக்களும் ஆத்திரத்துடன் அந்த வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் செ ன்றுள்ளனர். அதற்குள் அவர்கள் எஸ்கேப் ஆகிவிட,போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து, போலீஸார் பல்வேறு இடங்களில் தேடியலைந்து தர்மேந்திரா,திரிலோகியைக்கண்டுபிடித்து விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்ததில், மூன்று பேரும் அன்று நல்ல குடிபோதையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருக்க, அதைத் தூக்கி வந்து வீட்டிற்குள் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.பிடிபட்ட இருவரையும் சிறையில் அடைத்த போலீஸ், தப்பிச் சென்ற இளைஞரைத் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி,முல்லை நகர் மட்டுமல்லாமல் அதன் அருகாமையில் உள்ள கணேசபுரத்திலும் பரவ,அங்குள்ள மக்கள் கொதித்துப் போனார்கள். .

‘வாடகைக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களை குடிவைத்து விடுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் அட்டூழியம்தான். இவர்களை இனியும் ஊ ருக்குள் வைத்திருந்தால் எங்கள் ஊரில் பெண்கள் மட்டுமல்ல, பெண் குழந்தைகளும் வாழ முடியாது. அவர்கள் அத்தனை பேரையும் ஊரைவிட்டுக் காலி செய்ய வே ண்டும்!’ என்று கோரிக்கை வைத்து இங்குள்ள பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தை கடந்த திங்களன்று முற்றுகையிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இரவோடு இரவாக இந்தப் பகுதிகளில் உள்ள மக்களே எந்தெந்த வீடுகளில் பீகாரிகள் தங்கியிருக்கிறார்களோ அங்கெல்லாம் போய்அவர்களைத் துரத்தியடிக்கும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்கள். இதில அரண்டுபோன பீகார் இளைஞர்கள், தாங்கள் வேலை செய்யும் கம்பெனிகளில் தஞ்சமடைய அவர்களில் பலர் சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.அப்படிப் போக முடியாதவர்கள் தற்போது அந்தந்த கம்பெனிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ‘யாரோ தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த பீகாரிகளையும் ஊரைவிட்டே விரட்டுவது எப்படி நியாயமாகும்? எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்!’ என்று சொல்லி சில தொழிற்சங்கவாதிகளும், கம்பெனி அதிபர்களும் கோவையில் உள்ள உயரதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கலெக்டரிடம் புகார் செய்த பாரதி சுயஉதவிக்குழு ஊக்குனர் ராதாமணியிடம் பேசினோம்.“வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு சிறிய அறையில் இருபது பீகாரி களைத் தங்க அனுமதிக்கிறார்கள். தலைக்கு முந்நூறு என ஆறாயிரம் ரூபாய் வீட்டுக்காரர்களுக்கு கிடைக்கிறது. இப்படி அதிகமான வாடகை கிடைப்பதால் வீட்டுக்காரர்கள் இந்த பீகாரிகள் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதேயில்லை. ரோட்டில் வயதுப் பெண்கள் நடந்து செல்லமுடியாது.அவர்களைப் பார்த்து எங்களுக்குப் புரியாத மொழியில் கிண்டலடிப்பதும், சிரிப்பதும் நடக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு 13வயசுச் சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதை அக்கம்பக்கத்தவர்கள் பார்த்து சத்தம் போட, அந்த வீட்டில் குடியிருந்த பீகார்காரன்கள் அத்தனை பேரும் தப்பி ஓடிவிட்டார்கள்.இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று சொல்லி விட்டுவிட்டோம். இப்போது இந்தக் கொடுமை. இனிமேல் அவர்கள் யாரும் இந்தப் பகுதியில் இருக்கவே கூடாது’’ என்றார் ஆவேசமாக.

“சின்ன குழந்தையை அவனுக பலாத்காரம் செய்த சம்பவத்தைக் கேள்விப்பட்டாலே ரத்தம் கொதிக்குது.ஆனால்,அவனுகளுக்குப் பாதுகாப்புக் கோரி அலைகிறது ஒரு கூட்டம். இதை எப்படி அனுமதிக்க முடியும்? இதை நான் முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்குப் புகாராக அனுப்பியுள்ளேன்!’’ என்றார் தி.மு.க பிரதிநிதியான தினகரன்.



இதுபற்றி குறிச்சி நகராட்சித் தலைவர் பிரபாகரனிடம் விளக்கம் கேட்டபோது,“சில பீகார் இளைஞர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்தமாக அவர்களை அடித்து விரட்டி யிருக்கிறார்கள். அவர்களை எங்கள் கம்பெனிகளில் தங்கவைத்து பாதுகாப்புக் கொடுக்கிறோம். ‘அவர் களை வெளியே விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெவ்வேறு போராட்டங்களைச் செய்ய வேண்டிவரும்’ எனச் சொல்லி சில அமைப்புகள் மிரட்டுகின்றன. இதைச் சரிக்கட்ட பணமும் எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ‘எங்களிடம் வேலை பார்க்கும் பீகார்காரர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’என்று சொல்லி சில கம்பெனிக்காரர்கள் தலைவர் என்ற முறையில் என்னிடம் வந் தார்கள். அவர்கள் பாதுகாப்பை உயர் போலீஸ் அதிகாரிகளிடம்தான் கோரவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன். மற்றபடி அவர்களுக்காக நான் பரிந்து கொண்டு எந்த விஷயத்திற்கும் செல்லவில்லை!’’ என்றார் அவர்.
நன்றி:- ‍ ரிப்போர்டர்

ஏற்கனவே பம்மல் பல்லாவரம் போன்ற பகுதிகளில் இது போன்று பல செய்திகள் வந்துள்ளன.

இது போன்று இன்னும் பல சோகங்கள் பரவலாக செய்தியாகியுள்ளன.

அதிகாரிகளும் பொது மக்களும் விழிப்புடன் இருப்பது நல்லது.

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

வருந்த தக்க செயல்

இருந்தாலும் ஒட்டு மொத்த பீகாரிகளே தவறானவர்கள் என்ற அணுகுமுறை மிகவும் தவறு.

இதே போல சேலம் மாவட்டத்தை சார்ந்த இருவர் கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுபட்டால், சேலம் மாவட்ட மக்களே இங்கு (கோவைக்கு) வரக் கூடாது என்பார்களா.