Thursday, October 05, 2017

கமல்ஹாசன்

கமலஹாசன் :-


இவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இனி இவரை இவரது நிலைப்பாட்டை கேள்வி கேட்கலாம்.


இவரது இன்றைய ஒற்றை கொள்கை ..ஊழல் ஒழிப்பு. இதில் எல்லோருக்கும் பெரிய மாற்று கருத்து இருக்காது. லஞ்சம் வாங்குபவர்களை தவிர..!!


மற்றபடி இவரது் செயல் திட்டங்களில் பிரச்சனைகளில் இவரது நிலைப்பாட்டை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.


யாரும் சரியாக ஆட்சி செய்யவில்லை என்பதனால் நானும் முதல்வராவேன் என்று இவர் உரிமை கோர வருகிறார். இதில் பெரிய தவறு இல்லை. இபிஸ் மற்றும் ஒபிஸ் ஆகியோர் யாருக்கு தொண்டு செய்து முதல்வர்கள் ஆனார்கள்?.

 ஸ்டாலின், அன்புமணி சீமான் போன்றோருக்கு இவர் பெரிய இடைஞ்சல். எந்த கட்சியும் சாராமல் இருக்கும் ஒரு 30 சதவிகித வாக்குகளை இவர் குறி வைக்கலாம். அது அடுத்தவருக்கு பெரும் பாதிப்பைதானே ஏற்படுத்தும் ?

கமலின் வருகை பற்றி தேசிய கட்சிகள் எதிர்வினையாற்ற கூட முடியாமல் இருட்டில் காரின் விளக்கு வெளிச்சத்தில் செய்வதறியாது நடுசாலையில் முழித்து கொண்டு உறைந்து போய் நிற்கும் முயலை போல் நிற்கின்றன.

பலன் என்ன என்று எல்லோருக்கும் தெரியும் ?  J
சில தீவிர பா.ஜ.க.வினர் இப்போதே கமலை எள்ளத் தொடங்கிவிட்டனர்.
பலன் என்னவோ பூஜ்யம் தான்!  எப்படியும் சட்னிதான். 


இவரின் "நிறம்" என்ன என்று அறிய முற்படுவதில்தான் இன்று பலர் யோசிக்கின்றனர்.

இவர் கருப்பு சட்டைகாரரா ?
இல்லை காவி சட்டை காராரா?
இல்லை வெள்ளை சட்டைகாரரா ?
இல்லை லுங்கி கட்டி வருவாரா ?


இப்படி இவரை வகைப்படுத்த பிரம்ம பிரயத்தனம் நடக்கிறது. இந்த குழப்பத்தை போக்க கமல் பேச்சு உதவவில்லை. காரணம் பேச்சு எளிமையாக இல்லை

ரஜினியிடம் வெறும் ஒரு பளபளப்பான புகழ் வெளிச்சம் மட்டுமே இருக்கும்.
கமலிடம் எப்போதும் ஒரு புத்திசாலித்தனம் கலந்த புகழ் இருக்கும்.இவரது ரசிகர்களும் தங்களின் நட்சத்திரம் ஒரு புத்திசாலி என்று பெருமை கொள்வார்கள்.

கமலின் இன்றைய அரசியல் எதிரிகளுக்கு இந்த புத்திசாலித்தனத்தின் மீது ஒரு பயம் இருக்கிறது.
“தெர்மோகோல்” மற்றும் “சோப்புநுரை” அளவுக்கு மூளை கொண்ட மந்தி(ரி) களை கொண்ட அதிமுக அரசு இந்த விருமாண்டி காளையை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை. கன்னாபின்னா என்று பேசுகிறது.

முதலில் இவர் சினிமாக்காரர். இவர் பேசக்கூடாது என்றது. ஜெயா என்ன சமுக சேவகியா என்றவுடன் அடங்கியது.
அடுத்து இவரது குடும்ப வாழ்க்கை சரியில்லை என்றது. ஜெயா முதல் செங்கோட்டையன் வரை இவிங்க குடும்ப வாழ்க்கை வாயை அடைக்கிறது.
இப்படி எந்த பக்கம் போனாலும் கேட்டை போட்டா பயபுள்ளக என்ன பண்ணும். ? முழிக்குதுங்க.

இதெல்லாம் தெரிந்துதான் திமுக இப்படியெல்லாம் மோதவில்லை. ஏன்னா...இவிங்க லட்சணம் நாடறியும். அதனால் அவர்கள் வழக்கப்படி எடுத்தவுடன் தமிழர் முறைப்படி "இடுப்புக்கு கீழே" ( தாக்க தொடங்குகின்றனர்.

கமல் பார்ப்பனர் ..
அஹா. அஹா. என்ன கண்டு பிடிப்பு.?
கமல் எந்த அளவு பார்ப்பனர் என்றால் ஜெயா எந்த அளவுக்கு பார்ப்பனரோ அந்த அளவுக்கு.!!!  இன்னும் சொல்லப்போனால் இவர் அதற்கும் வெகு தூரம்.

பிராமண சமுகத்தை விட்டு கமல் வெளியே வெகு காலம் முன்பே வெகு தூரம் வந்துவிட்டார். இவர் எங்களவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம். ஜெயாவுக்கு அப்படித்தான் சிலர் சிலகாலம் சொல்லி கொண்டனர். ஆனால் உண்மையில் கமல் “நம்மவர்” ஆகி வெகு காலம் ஆகிவிட்டது. நம்பாதது உங்கள் இஷ்டம்.

இவரது பெற்றோர் சாதிதான் இவருக்கும் என்றால் ..
பெரியார் நாயக்கரே!
காமராஜர் நாடாரே !
அண்ணா முதலியாரே!
ஜெயா அய்யங்காரே!

கமலை ஜாதி பாட்டிலில் அடைக்க முயலாதீர்கள். இந்த பூதம் அங்கு அடங்காது. அந்த களத்தில் அவரை வீழ்த்த முடியாது.

கொள்கைகளிலும் செயல்பாட்டிலும் இவரை கருத்தியலால் மோதுங்கள்.
வெல்ல வாய்ப்புகள் அதிகம்.
இப்போதுதான் ஒரு புத்திசாலியை களத்தில் சந்திக்க போகிறீர்கள்.
ஆனால் அதற்கு உங்களிடம் சரக்கு இருக்க வேண்டும்.

இவர் நல்லவரா! கெட்டவரா.....! .....தெரியாது. 

ஆனால் முட்டாள் இல்லை.

எனவே ஆட்டம் சூடு பிடிக்கிறது.! 

#KAMAL_HASSAN 



No comments: