Tuesday, January 24, 2017

தொலை தூரம் வந்து கற்ற கல்வி.!!

மேற்கு நாடுகளில் வாழ வந்தபின் நான் புரிந்து கொண்டது, அங்கு இந்தியாவில் /தமிழகத்தில் நாம் எப்படி மெல்ல கலாசார ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு அழிக்கபடுகிறோம் என்பதேயாகும்.
நம்மிடத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. நிறைய இருந்தன. இருக்கின்றன. 


ஆனால் அதற்கான தீர்வுகளை 5000 வருடங்கள் பழைமை கொண்ட நம்மிடையே தேடாமல் வெறும் 1000 வருட சரித்திரம் கொண்ட ஐரோப்பியரிடமும், இப்போது அதனின் எச்சமான வெறும் 225 வருடங்களேயான அமெரிக்க குடியேறிகளிடமும் தேடியது,தேடுவது எத்தனை மடமை.??
இவர்கள் தங்களின் 1000 வருட சரித்திரத்தில் போரிட்டு அழித்துக் கொண்டது போக மிச்சம் இருந்த கலாச்சாரத்தையும் இன்று கார்போரேட்களின் காலடியில் வைத்து இழந்து விட்டு மீட்க முடியாமல் சூழ்நிலை கைதிகளாய் நிற்கதியாய் நிற்கின்றனர்.
எல்லா விஷயமும் வேண்டாம். பதிவு புத்தகமாகிவிடும். உதாரணமாக கால்நடைகள் பற்றி பார்போம்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா???
இங்கிலாந்தில் மரபணு மாற்றம் செய்யப்படாத மாடுகளே கிடையாது.
எந்த அளவுக்கு மாற்றம் என்பதில்தான் மாட்டின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் ஒரு விஷயம். இந்த ஊரில் கிராமப்புறங்களுக்கு சென்றவர்கள் கூட காளைகளை கண்டிருக்கவே முடியாது.ஏன் என்றால் அவைகள் பிறப்பதையே அரிதாக்கி விட்டனர். எல்லாம் ஒரு சிலரிடம் மட்டுமே போய் சேர்ந்து விட்டது.
நான் இந்த ஊர்களில் வந்த போது கண்ட ஒரு விஷயம் என் கண்ணை உறுத்தியது. இங்கு எந்த பசுவுக்கும் கொம்பு இல்லை. எல்லா பசுவும் கிட்டதட்ட ஒரே நிறத்தில் அதாவது கறுப்பும் வெளுப்புமாகவே இருந்தன. நான் இருந்த இடம் சரியான கிராமம். வழக்கமாக பொருளாதார தற்சார்பு கொண்ட இது போன்ற கிராமங்களில் என்னை போன்று அன்னியர்களை நுழையவே விடமாட்டார்கள்.
நம்மூரு போல் பண்ணையார் ஆளை வச்செல்லாம் அடிச்சு விரட்ட மாட்டார்கள். ஆனா ஊரு மொத்தமும் உங்களுக்கு வாடகைக்கு கூட வீடு தரமாட்டார்கள். மத்தபடி சிரித்து பேசி
அனுப்பி விடுவார்கள்.
அப்படிபட்ட இடத்தில் நான் கண்ட விஷயங்களை நோண்டிய போது கிடைத்த விஷயங்களே இவர்கள் கால் நடைகளை நவீன விஞ்ஞானத்தில் இழந்தது. இயந்திர புரட்சியில் இவர்கள் இழந்தது இதுவும் ஒன்று. ஒரு 200 வருடங்களில் படிப்படியாக இவர்கள் கால்நடைகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டனர். திரும்ப போக நினைத்தாலும் முடியாது.
இன்று இவர்களின் சொந்த உரிமை என்று கொண்டாடும் ரகங்களே இல்லை. அப்படி சொல்லப் படுபவைகளும் பெருமளவு மரபணு மாறியவைகளே...
இவர்கள் கால்நடைகளை உணவுப் பொருளாகவே பார்த்து 10 தலைமுறைகளுக்கு மேல் ஆகி விட்டது.
ஒரு 10 வருடம் முன்பு foot and mouth decease என்று ஒரு நோய் இங்குள்ள கால்நடைகளை தாக்கிய போது அத்தனை கால்நடைகளையும்...ஆமாம் நாட்டின் அத்தனை கால்நடைகளையும் கொன்று தீயிட்டு எரித்தார்கள். புதைத்தால் கூட நோய் திரும்ப வரும் என்கிற பயம். எத்தனை லட்சம் என்று தெரியாது. உலகம் மெளனமாகத்தான் இருந்தது. ஜீவ காருண்ய ரட்சகர்கள் எதுவும் பேசவில்லையே???
அன்று பத்து வருடம் முன்பு இந்த நோய் தாக்குதல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து மாட்டுக்கறி இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது.
இன்று வரை தடை நீடிக்கிறது.
இப்பொழுது கவனியுங்கள்.. எப்பொதிருந்து நம் நாட்டிலிருந்து மாட்டுக்கறி ஏற்றுமதி கொடிகட்டிப் பறக்க தொடங்குகிறது???
இப்போது புரிகிறதா உலக சந்தையின் சூட்சுமம்.?
இன்னொரு விஷ்யம். சமிபத்தில் அறிந்தது. நம் கால்நடைகள் foot and mouth decease க்கு சிக்காத மரபாம். ஒரு பேட்டியில் செனாபதி சொல்ல கேட்டேன். அந்த நோயும் வெறும் வேப்பிலை சாறு கொண்டு தீர்க்க முடியும் என்று ஒருவர் சொன்னார். வேப்பிலை இங்கு முளைக்காது. இதை பரிசோதித்து கூட பார்க்காமல் அமெரிக்க உணவு சந்தையின் கட்டளையின் படி அத்தனை கால்நடைகளையும் இங்கு அழித்தார்கள். இந்தியாவையும் இந்த வலையில்தான் சிக்க வைக்கின்றனர்.
இத்தகைய காட்சிகளை கண்ட நான்
என் வாழ்நாளில் நம்முரில் கண்ட காளைகளான தஞ்சை குட்டை காளை, மொட்டை காளை, ஓங்கோல் காளைகளே இன்று அரிதாகி போனதை நினைத்து பார்க்கிறேன்.
எல்லாமே இங்கு உணவாகி போகிறது.
இவர்கள் ஏற்கனவே தங்களின் உணவு சங்கிலியை அறுத்து உண்டு ஏப்பம் விட்டு விட்டனர். எனவே அடுத்து இவர்களின் பார்வை ஆசிய ஆப்பிரிக்க உணவு சங்கிலியின் மீது வீழ்ந்திருக்கிறது. அதன் முதல் படிதான் இந்த ஜீவகாருண்ய வேடம். அதில் நாம் பாதி விழுந்து விட்டோம்.
அவர்களுக்கு புரியாதது நமக்கும் கால்நடைகளுக்குள் இருக்கும் ஒரு பந்தம். அதை நம் மதம் வளர்த்தது.
கிராமிய கலாசாரம் வளர்த்தது. It is time tested inter related inter dependent life style which was nurtured and sustained by temple rituals and traditions.
இல்லையென்றால் ஒரு 5000 ஆண்டுகள் இந்த பந்தம் எப்படி தொடரும்???
இப்போது சொல்லுங்கள்.
ஒரு இறந்துபோன கலாசார பிணத்தின் மீது வாழ்பவர்களா நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பிக்கிறார்கள்??? அன்றும் சரி..இன்றும் சரி. நம்மிடம் இருக்கும் ஒற்றை எதிரி ஜாதி சண்டையே. இப்போது இடை செருகலாக மதச்சண்டை.
எதுவாகினும் தீர்வு வெளியே இல்லை.
அப்படி நினைத்தால் குரங்கு அப்பம் பங்கிட்ட கதைதான்.

No comments: