Thursday, January 26, 2017

கேள்விகள்.



என் சிறுவயதில் நான் என் தந்தையை நிறைய கேள்விகள் கேட்பேன்.
எல்லோரும் செய்வதுதானே !!
இதில் என்ன அதிசயம் என்றுதானே நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் பல அடிப்படை நம்பிக்கைகளை எங்கள் குடும்பம் வழி வழியாக நம்பி வந்தவைகளையே கேள்வி கேட்டேன். 
 வழக்கப்படி குடும்பம் மிரண்டு போனது. ஆனால் என் தந்தை என் மீது கோபப் படவில்லை.
 இதுல காமெடி என்னவென்றால் அவர் முழுவதும் நம்பியவைகளையே நான் கேள்விக்குரியதாக்கி விளக்கம் கேட்டேன். அவரால் சொல்ல முடியவில்லை.
ஆனாலும் அவர் கோபப்பட்டு திட்ட வில்லை.
எல்லாம் பின்னாடி தெரியும் என்று மழுப்பவில்லை.
தெரியவில்லை என்று ஒத்துக் கொண்டார்.
காரணம் அவர் பொய் சொல்லி அறியார்.
இது என்னை வெளியே பார்க்க வைத்தது. கேள்விகளுக்கு
வெளியே புத்தகங்களில் தேடினேன்.
நான் கண்ட முதல் சிறுவர் நூலகம்
மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நூலகம். பின் பல இடங்கள்.
சில பதில்கள் கிடைத்தன. பல பதில்கள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். நெடிய பயணம் இது.
இது என்னை பண்படுத்தியதா?? இருக்கலாம்.
அதற்கு நான் தேடிய முறையும் ஒரு காரணம்.
திறந்த மனத்துடன் தேடினேன்.
There was no pre-Conceived notion.
பெரியார் தவறு என்று நினைத்து அவரை படிக்கவில்லை. ஆதிசங்கரர் சரி என்று நினைத்து அவரை தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் படித்த பிறகு அதை ஒப்பிடு சிந்தனைக்கு உள்ளாக்கினேன். அங்குதான் விடைகள் அதிகம் கிடைத்தது. ஒருவர் சொல்லிவிட்டார் என்பதாலேயே உண்மையாகாது.
அடுத்து இன்றைய உண்மை நாளைய பொய்யாக வாய்ப்பு அதிகம்.
மேலும் கருத்துக்கள் எப்போதும் அதன் காலத்துடன் பொருத்தி பார்த்து புரிந்து கொள்ளல் வேண்டும்.
வெகு சில தத்துவங்களே காலத்தை கடந்து நிற்கும்.
குறளைப் போல எது நின்றது.????
ஆனால் நிறைய சாக்கடைகளை தாண்டித்தான் சில நன்னீர் ஓட்டங்களை காணமுடியும் என்று புரிகிறது.
உலக அளவில் தேடினேன்.
பார்வை விரிவடைந்தது. ஆனால் பலன் இருந்ததா
தெரியாது. பலன் கிடைத்தே ஆக வேண்டும் என்கிற
கட்டாயமா?
ஒரு பார்வையாளனாக பலவற்றை கடந்து போனேன். ஒவ்வொரு நாளும் இதுதான் சிறந்தது உச்சம் என்று நினைக்கும் விஷயங்கள் மாறிக் கொண்டே வந்தன.
அதன் காரணம் நான் கடக்கும் பாதையும் ஏறும் என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். என் சென்ற ஆண்டு இலக்கு இன்று இல்லை. இன்றைய இலக்கு நாளை இல்லாமல் போகலாம்.
சிலசமயம் இலக்கு தேவையா என்றே கேட்க தோன்றுகிறது.
வாழ்க்கை ஒரு நதி போல என்று சொன்னவன் புரிந்தவன்

No comments: