Saturday, January 28, 2017

வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?Image may contain: sky, cloud and outdoor

கொஞ்சம் திரும்பி பார்த்தால் நாம் எப்படி பொதுவாக முன்னேற்றம் வேகம் என்கிற கலர் கண்ணாடியை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சு அதன் பக்க விளைவுகளே எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் விழிக்கிறோம். 

உடனே நான் முன்னேற்றத்திற்கு எதிரி பழமைவாதி ...
என்று நவீன ஐன்ஸ்டீன்கள் கிளம்பிடாதீங்க.!!!

எந்த ஒரு மாற்றத்தையும் அதன் முழு பரிமாணங்களுடன் பார்ப்பது அதனால் நாம் பெற்ற நல்லதுகளும் கெட்டதுகளும் பற்றி அறிய உதவும்.

ஒரு மேற்கத்திய ஆள் சொன்னார்...உலகின் அதி மோசமான கண்டுபிடிப்பு...2 ஸ்ட்ரோக் இஞ்சின்தான்.
என்றார். முதலில் இது அபத்தமாக இருந்தது. பின்
கொஞ்சம் கொஞ்சமாக அவர் சொல்வதின் அர்த்தம் புரிந்தது.

முதலில் இந்த இஞ்சினுக்கான எளிய எரிபொருள் தேடுதல் தொடர்ந்தது. அதன் பலன் நமக்கு பெட்ரோல் கிடைத்தது. தார், மற்றும் கச்சா எண்ணையை பற்றி மனிதன் முன்பே அறிந்தாலும் அதை இந்த இஞ்சின் கண்டு பிடிப்புடன் இணைத்ததுதான் .. Deadly Combination.
இந்த பெட்ரோல் தனியே வரவில்லை. அதன் தொடர்ச்சியாக டீசல், கெரோசின் தார், இப்படி அதன் உப பொருள்கள் வந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்கு அடியில் பதுங்கியிருந்த விஷங்கள் மேலே கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டன. சுற்று சூழல் மாசு பட்டது. விஷத்தின் கடைசி எச்சமாக பிளாஸ்டிக் வந்தது.
இது அடுத்த 25000 வருஷத்திற்கு நம்மை விட்டு போகாது என்று இப்போது சொல்ல தொடங்கியிருக்கின்றனர்.

இதன் இன்னொரு பக்கம் பாருங்கள். முதலில் சிறு இஞ்சின், பின் கார், லாரி, பஸ், மற்ற இயந்திரங்கள் என்று இதை சார்ந்த பொருள்களின் உருவாக்கம். இதற்கான தொழிற்சாலைகள் பிர்மானடமாக உலகெங்கும் உருவாகின்றன. இப்போது இந்த தொழில்களுக்கான இடு பொருள்களின் தேவை அதிகரிக்கிறது. இப்போது அதை தேடி பூமியை பெருமளவு சேதப்படுத்த தொடங்குகிறோம்.

ரப்பர், கண்ணாடி, ரசாயன கலவை பெயின்ட், இப்படி
இதன் உப பொருள்களின் லிஸ்ட் ரொம்ப பெரிது.

இப்போதும் வேகம் வேகம் வேகம் இன்னும் வேகமான கார்களுக்கும், பஸ்களுக்கும் நாம் தேடி சென்று கொண்டு இருக்கிறோம். இப்போது இதற்கான சாலைகள் அமைப்பு. பின் அதற்கான கட்டுமான பொருள்கள் சேகரிப்பு ..இப்படி இன்னொரு பக்க உருவாக்கங்கள்.

இவையெல்லாம் முன்னேற்றம் என்கிற அளவிலேயே உங்கள் முன் வைக்கப்படுகிறது. இவைகளில் எத்தனை வளர்ச்சிகள் நமக்கு நல்லது செய்தன..எவ்வளவு கெட்டது செய்தன என்று சிந்தியுங்கள். இது நிச்சயம் தேவை..
காரணம் நாளை ..பசித்தால் நீங்கள் பெட்ரோலை குடிக்க முடியாது. பிளாஸ்டிக்கை திங்க முடியாது.

இன்று அதே எண்ணைக்காக எத்தனை லட்சம் மக்கள் கேள்வியே இன்றி கொல்லப்படுகின்றனர் ? கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர்
மத்திய கிழக்கில் மட்டும் போர்களில் இறந்து போனார்கள்.

இத்தனை அசுர விஷயங்களும் வெறும் ஒரு 150 ஆண்டுகளிலேயே நடந்து விட்டன. ஆனால் இதனால் பாழாய் போன உலகை சீர் செய்ய இன்னமும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இப்போது இன்று இந்த நிமிடம் நாம் பிளாஸ்டிக்கை உபயோகிப்பதை நிறுத்தினால் கூட இருக்கும் குப்பை அடுத்த 25000 வருஷங்கள் ஆகும். ...என்ன செய்ய போகிறோம்...!!

இது வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

No comments: