Tuesday, January 10, 2017

ஜல்லி கட்டு அல்லது ஏறு தழுவதல்


சும்மா கிடக்கிற சங்க ஊதி கெடுக்கிரதுங்கறது இதுதானோ?
ஒரு 50 வருஷத்துக்கு முன்பு மதுரைக்கு மேலே வட தமிழ்நாட்டில் பாதி பேர் வெறுமே செவி வழி செய்தியாக கேள்விப்பட்ட ஜல்லி கட்டை இன்று ஒட்டு மொத்த தமிழ்நாட்டு அடையாளமாக மாற்றிய புண்ணியத்தை "பேட்டா" கட்டிக் கொண்டது.
வீர பாண்டிய கட்ட பொம்மன் பட மாடு பிடி 
காட்சி கூட இதை ஒரு பாண்டி நாட்டு கலாசாரமாகவே
கொண்டு சென்றது.
70 களில் தொலைக்காட்சி வந்த போது கூட வெறும் கருப்பு வெளுப்பு காட்சியாக தென் தமிழ்நாட்டு பொங்கல் சமயத்து நிகழ்வாக இந்த ஜல்லிக்கட்டு வெளியே வந்தது. அன்று யாரையாவது ஜல்லிக்கட்டு என்றால் அலங்கா நல்லூர் என்று மட்டுமே சொல்வார்கள்.வாடி வாசல், மாட்டு பிடிப்பு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவதல் என்கிற வார்த்தைகள் எல்லாம் வட தமிழ்நாட்டு மக்களுக்கு செவி வழி செய்தியே...
80 களில் ரஜினி முரட்டுகாளையாக மாட்டை பிடித்த போதும் பெரிய மாற்றங்கள் இல்லை. அலங்கா நல்லூரை அரசே விளம்பர படுத்தியது. தமிழ்நாட்டு செய்தி சுருளில் பதிவுகள் உண்டு.
பின்னாடி கமல் விருமாண்டியில் மாடு பிடிக்க இறங்கிய போது அதன் உள் இருக்கும் சாதி பரிணாமம் வெளியே தெரிய தொடங்கியது. அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
ஆனால் இன்று நிலை என்ன ?
மதுரையில் மாடு பிடிக்க தடை கூடாது என்று சென்னையில் 15,000 பேர்கள் (பெரிய எண்ணிக்கையப்பா!) ஊர்வலம் போறான்.
இதுல நகைச்சுவை என்னவென்றால் இன்னமும் வட தமிழ்நாட்டில் மாடு பிடி கிடையாது. இனிமேலும் வராது.
பின் எப்படி இத்தனை கூட்டம் ? சிந்தியுங்கள்.
வேறு பல கோபங்களை உள் அடக்கிய கூட்டம் இது.
ஒற்றை நோக்கத்தோட வந்தாலும் அதில் ஒவ்வொரு ஆளையும் கேளுங்கள்...தமிழ்நாடு பல் வேறு விஷயங்களில் கை விடப்படுவதாகவே வஞ்சிக்க படுவதாகவே கூறுவார்கள்.
ஜாதி சாயம் பூசப்படாமல், கட்சி சாயம் பூசப்படாமல், மத சாயம் பூசப்படாமல் கூட முடிகிறது என்கிற காரணத்தால் தைரியமாக கூடு கின்றனர்.
இந்த போராட்டத்தில் இருந்து படிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
சரியான தீர்வுகளை தமிழர்களுக்கு தாருங்கள்.
இது தேசியத்திற்கு மிகவும் அவசியம்.

No comments: